Labels

Wednesday, 2 June 2021

உணவுக்குமட்டுமாஉப்பு...????


உப்பை உணவுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா என்ன???
வேறு சில பயன்பாடுகளுக்கும் உப்பு பயன்படுகிறதே, அதனை அறிவோமா??

 அரிசியில் சிறிது உப்புத் தூளைக் கலந்து வைத்து விட்டால், எத்தனை நாட்கள் சேமித்து வைத்திருந்தாலும் அது புதிதாகவும் புழுப் பூச்சிப் பிடிக்காமலும் இருக்கும்.

பாதம் நனையும் அளவுக்கு ஒரு அகலமான பாத்திரத்தில், மிதமான சூட்டில், வென்னீர் எடுத்து, அதில் கல் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, 10 நிமிடங்கள், பாதங்களை நீரில் வைக்கவும்.

 இதை, தொடர்ந்து செய்து வந்தால், கால்கள் மிருதுவாகவும், பளிச்சென்றும் இருக்கும். கால் வலி இருந்தாலும் பறந்து போகும்.

கேரட், பீட்ரூட் வாடிப் போனால், நறுக்குவது சிரமமாக இருக்கும். அவற்றை, உப்பு கலந்த நீரில், சிறிது நேரம் போட்டு வைத்தால், ப்ரஷ்ஷாகி விடும்; நறுக்குவதும் எளிதாக இருக்கும்.

ஒரு பக்கெட் தண்ணீரில், ஒரு கப் கல் உப்பு சேர்த்து, அதில் ஜீன்சை ஊற வைத்து பின் துவைத்தால், கலர் மாறாமல் அப்படியே நீடித்திருக்கும். முதல் முறை மட்டுமல்ல, ஒவ்வொரு முறை துவைக்கும் முன்பும் இப்படி செய்யலாம்.

பண்டிகைக்கு செய்த பட்சணங்கள் மீதமிருந்தால், நீண்ட நாட்கள், அவை சிக்கு வாடை அடிக்காமல் இருக்க, துண்டு துணியில், ஒரு கைப்பிடி கல் உப்பை போட்டு, பட்சணங்கள் வைத்துள்ள பாத்திரத்தில், பட்சணத்திற்கு அடியில் போட்டு வைக்கவும்.

குத்து விளக்கை, முதலில் பழைய செய்தித்தாளால் துடைத்து, பின், புளி மற்றும் உப்பால் தேய்த்து கழுவினால், எண்ணெய் பிசுக்கு நீங்கி, விளக்கு, 'பளிச்'சென்று ஆகி விடும்.

புடவைகளுக்கு அடிக்கும் பால்ஸ்களை, முதலில் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து, உலர வைத்து, பின் அயர்ன் செய்து தைத்தால், சாயமும் போகாது; ஓரமும் சுருங்காது.

சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் தொட்டியில் நீர் போகாமல் அடைத்துக் கொண்டிருக்கிறதா... சிறிது கல் உப்பை, இரவில் போட்டு வையுங்கள். காலையில் நீர் அடைப்பு இருக்காது.

ப்ரிஜ்ஜில் இருக்கும் ப்ரிசரில், சிறிது கல் உப்பை துாவி வைத்தால், ஐஸ் கட்டி டிரேக்களை எளிதில் எடுக்கலாம்.

 சட்டைக் காலர்களில் அழுக்கு படிந்திருந்தால், சிறிது பொடி உப்பை, அழுக்கு உள்ள பகுதிகளில் பூசி, சிறிது நேரம் கழித்து, பிரஷ்ஷில் தேய்த்தால், அழுக்கு நீங்கி விடும்

 இரும்புப் பொருட்களில் துருப்பிடித்திருந்தால் அவற்றின் மேல் உப்பு கொண்டு தேய்த்தால் பளபளப்பாகிவிடும்.

 பட்டுத் துணிகளைத் துவைக்கும் போது நீரில் சிறிது உப்பைக் கலந்து கொண்டு அதில் துணிகளை அலச வேண்டும். பட்டுத்துணியின் மிருதுத் தன்மையும் நிறமும் மாறாமல் இருக்கும்.

 வீட்டில் தரையைக் கழுவும் போது சிறிது உப்பை நீரில் கலந்து கழுவினால், தரை காய்ந்த பின்பு ஈக்கள் தரையில் மொய்க்காது.

 சுத்தமான நெய்யில் ஒரு சிறு கரண்டி அளவு உப்பைப் போட்டு முழுவதையும் சூடுபடுத்தி வைத்தால் நெய் அதிக நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

 சமையல் பாத்திரங்களில் வெங்காய வாசனை போகாமல் இருந்தால் உப்பு கலந்த சுடுநீரில் அப்பாத்திரத்தைக் கழுவினால் அந்த வாசனை போய் விடும்.

 நீண்ட பயணத்தால் கால் களைப்பு ஏற்பட்டு இருந்தால் சுடுநீரில் சிறிது உப்பைப் போட்டு அந்த உப்புச் சுடுநீருக்குள் கால் பாதங்களைச் சிறிது நேரம் வைத்து இருங்கள். கால் களைப்பு காணாமல் போய் விடும்.

 துணியில் மைக்கறை அல்லது இரத்தக்கறை இருந்தால் அந்தக் கறையின் மேல் உப்பைத் தேய்த்துச் சுடுநீரில் அலசுங்கள் கறை அகன்று விடும்.

பாம்பு, பூரான் போன்ற வல்லூறுகள் வராமலிருக்க வீட்டை சுற்றி கல்லுப்பினை முன்னோர்கள் தூவினர் என்பது பலர் அறிந்ததே..

 கடுகு எண்ணெய்யில் உப்பைக் கலந்து பல் துலக்கினால் பல் உறுதி பெறும்.

 குக்கரின் அடியில் படிந்திருக்கும் கரையைப் போக்க, வெறும் குக்கரை அடுப்பில் வைத்துச் சூடேற்றுங்கள். பின்னர் உப்புத் தூளை உள்ளே போட்டு சிறிது நேரத்தில் இறக்கி அடிப்பாகத்தைக் சுத்தம் செய்தால் கரை இருக்காது....!!!

Tuesday, 25 May 2021

தான பத்திரம் தான செட்டில்மெண்ட்


 
தான பத்திரம் தான செட்டில்மெண்ட்  தனக்குச் சொந்தமான ஒரு காலி மனையையோ அல்லது ஒரு கட்டிடத்தையோ இரத்த சம்பந்தம் இல்லாத வேறு ஒருவருக்கு கிரையம் செய்யாமல் முற்றிலும் இலவசமாக அளிப்பதை பதிவு செய்வதற்கு பயன்படும் பத்திரம் தான பத்திரம் ஆகும்
இதற்கு கிரையம் செய்வதற்கு வாங்குவது போல தானம் செய்யப்படுகின்ற இடத்தின் அல்லது கட்டிடத்தின் அரசு மதிப்பீட்டில் 8% தொகைக்கு பத்திரம் வாங்க வேண்டும்.

தான செட்டில்மெண்ட்

தனக்குச் சொந்தமான ஒரு காலி மனையையோ அல்லது ஒரு கட்டிடத்தையோ இரத்த சம்பந்தமுள்ள நெருங்கிய உறவுகளுக்குள் செய்து கொள்ளும் சொத்துரிமை மாற்றத்திற்கு பயன்படும் பத்திர பதிவுமுறை தான செட்டில்மெண்ட் ஆகும்
இதன் மூலம் தன்மீது காட்டுகின்ற அன்பு, பரிவு ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் தனக்குச் சொந்தமான சுய சம்பாத்திய சொத்தை அல்லது தனக்குச் சொந்தமான தனிப்பட்ட சொத்தை தனக்குச் சொந்தமான குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு மட்டும் எழுதி வைக்க முடியும்
இதற்கு அந்த சொத்தின் அரசு மதிப்பீட்டின் தொகையில் ஒரு சதவீதம் தொகை அல்லது அதிகபட்சம் ரூபாய் 25,000/- தொகைக்கு பத்திரம் வாங்கினால் போதும்
ஒருவர் தன் சொத்துக்களை,தான் உயிரோடு இருக்கும் காலத்திலேயே தனது உறவுகளுக்கு செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் எழுதிக் கொடுக்கும்போது, அந்த சொத்தைப் பெறுபவர் “குடும்ப உறவினராக” இருக்க வேண்டும் என இந்திய ஸ்டாம்ப் சட்டம் சொல்கிறது

குடும்ப உறவினர்கள் செட்டில்மெண்ட்

குடும்ப உறவினர் என்றால் தந்தை, தாய், கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை இவர்கள் மட்டும்தான் “குடும்ப உறுப்பினர்கள்” என்று இந்திய ஸ்டாம்ப் சட்டம் சொல்லி உள்ளது;

செட்டில்மெண்ட் பணம் கொடுக்க வேண்டுமா?

தான செட்டில்மெண்ட் மூலம் ஒரு சொத்தை பெறுபவர் யாருக்கும் எந்தவிதமான தொகையும் கொடுக்க வேண்டியதில்லை. இந்த முறையில் ஒரு சொத்தை பெறுபவர்கள் மீது அவருடன் பிறந்தவர்களாக இருந்தால்கூட எந்தவிதமான வழக்கும் பதிவு செய்ய முடியாது.

பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் செய்ய முடியுமா?

ஒருவர் தனக்கு மட்டும் சொந்தமான சொத்தையே தான செட்டில்மெண்ட் செய்ய முடியும். பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் செய்ய முடியாதுm  அப்படிச் செய்தால் அது செல்லாது மற்ற வாரிசுகள் வழக்குத் தொடுக்கலாம்.

செட்டில்மெண்ட் பத்திரம் எழுதுவதற்கு முன்னால்

செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதுவதற்கு முன்னால், சில சட்ட நுணுக்கங்களை சரியாகப் புரிந்து கொண்டு எழுதவேண்டும்; பொதுவாக ஒருவர் தன்னுடைய சொத்தை, செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் தன் குடும்பத்தினருக்கு எழுதிக் கொடுத்துவிட்டால், பின்னர் அந்த பத்திரத்தை ரத்து செய்யவே முடியாது
இதனைத் தெரிந்து கொள்ளாமல், ஏதோ ஒரு எண்ணத்தில், யாரோ ஒருவருடைய தூண்டுதலின் பேரில் ஒரு செட்டில்மெண்ட் பத்திரத்தை எழுதி விடுகின்றனர்
பின்னர், வாழ்க்கையில் ஏதோ ஒரு மன வருத்தம் ஏற்பட்டு, அதனை ரத்து செய்ய முயற்சி செய்கிறார்கள்; இப்படி ரத்து செய்ய அவர்களுக்கு அதிகாரம் சட்டத்தில் இல்லை
சென்னை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பின் அடிப்படையில், பத்திரப் பதிவு அலுவலகங்கள், இவ்வாறான செட்டில்மெண்ட் பத்திரங்களை ரத்து செய்ய முடியாது என அறிவுறுத்தி உள்ளது

செட்டில்மெண்ட் சட்டம் என்ன சொல்கிறது?

ஒரு சொத்தில், ஒருவர் தனக்குள்ள உரிமையை வேறு ஒருவருக்கு எழுதிக் கொடுத்து விட்டால், அந்த சொத்தில் அவருக்கு இருந்து வந்த உரிமை அத்துடன் முடிவுக்கு வந்து விடுகிறது
ஆகையால், அந்த செட்டில்மெண்ட் பத்திரத்தை பின்னாளில் ரத்து செய்ய எந்த அதிகாரமும் அவருக்கு இல்லை என்பதுதான் சட்டம்; ஆனால், சிலர் “என் சொத்தை, நான் தானமாகத்தானே அப்போது கொடுத்தேன்; இப்போது எனக்கு விரும்பம் இல்லை என்பதால், அதை இப்போது ரத்து செய்யப் போகிறேன்! என்று நினைக்கிறார்கள்
ஒருவர் தான் விற்ற சொத்தை எப்படி திரும்ப வாங்க முடியாதோ, அதேபோலத்தான், ஒருவர் தானம் கொடுத்த சொத்தையும் திரும்ப வாங்க முடியாது

உயிலுக்கும் தான செட்டில்மெண்டுக்கும் உள்ள வித்தியாசம்

தான செட்டில்மெண்ட் மூலம் எழுதிக் கொடுக்கும் சொத்தானது அதனை பதிவு செய்த உடனேயே அதனை எழுதிக் கொடுக்கப்பட்டவருக்குச் சொந்தமாகிவிடும்
எழுதிக் கொடுத்தவர்க்கு எந்த உரிமையும் இல்லாமல் போய்விடும். அவரே நினைத்தாலும் அதனை ரத்து செய்யவே முடியாது
உயில் மூலம் எழுதிக் கொடுக்கும் சொத்தானது அதனை பதிவு செய்தாலும், செய்யாவிட்டாலும் அந்த உயிலை எழுதியவர் இறந்த பிறகுதான் அமுலுக்கு வரும்
உயிலை எழுதியவர் அதனை பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை உயிலை எழுதியவர் உயிரோடு இருக்கும்வரை அதனை எத்தனைமுறை வேண்டுமானாலும் மாற்றி மாற்றி எழுதிக் கொள்ளலாம்
ஆகையால் உயிலைப் பொறுத்தவரை கடைசியாக எழுதப்பட்ட உயிலே செல்லு

மனிதன் தன் மரணகாலத்தை உணரும் குறிகள்


வியாசரே! முன்பொரு சமயம் பார்வதிதேவியும் பரமசிவனும் உரையாடும்போது பஞ்சப்பிரம விதானத்தைப் பற்றிச் சிவபெருமான் கூறி வந்தார். அப்போது பார்வதியார் விரும்பியபடி பிண்ட உற்பத்தி முதலிய கர்ப்ப அவஸ்தைகளை எடுத்துரைத்தார். பிறகு உமாதேவி அப்பெருமானை நோக்கி "அழியக் கூடிய மனித உடலின் முடிவு காலத்தையும் முக்தி அடையும் வழியையும் விளக்கியருள வேண்டும். காலச் சக்கரத்தைப்பற்றி ஒரு சந்தேகம் இருக்கிறது. தங்கள் ஆயுட்கால முடிவை மனிதர்கள் முன்னரே அறிந்துணர்ந்து தங்கள் திருவடித் தாமரைக்குப் பக்தி செய்ய வேண்டுவதால் அதைத் தெரிந்து கொள்ளக்கூடிய வழியைச் சொல்லவேண்டும்" என்று கேட்டாள். அதற்குச் சிவபெருமான் கூறலானார்.

தேவி! நிலம், நீர், நெருப்பு காற்று ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களில் அம்சமான உடலை எடுத்த மனிதர்கள் மரணக்குறிப்பை அறிந்து புகழைச் சம்பாதிக்கும்படியான வழிமுறைகளைச் சொல்லுகிறேன் கேள். சுந்தரியே! தேகம் எல்லாம் வெளுத்தும் காதுகள் கண்கள் மூக்கு முதலியன, ஓசை, ஒளி நாற்றங்களை அறியச் சக்தியற்றும் இருக்கும் மனிதன் ஆறு மாதத்தில் மரிப்பான். எந்தச்சப்தத்தைக் கேட்டாலும் அது மிருக சப்தத்தைப் போலக் கேட்டால் அவன் ஆறு மாதத்தில் மரணமடைவான். சூரிய சந்திரமண்டலங்கள் கருத்திருக்க கண்டவன் ஆறு மாதத்தில் இறப்பான். இடது கை ஏழுநாள் துடித்தாலும் சர்வாங்களும் துடித்து நாவு உலர்ந்தாலும் அவன் ஒரு மாதத்தில் உயிர் துறப்பான். நாவின் வழி வாதபித்த கபங்கள் ஒழுகப்பெற்றவன் ஒரு பக்ஷத்தில் மடிவான். நெஞ்சும் வாயும் உலரப் பெற்றவன். ஆறு மாதத்தில் உயிர் நீப்பான். நாத்தடித்தும் குளிர்ச்சியால் பல்லிறுகக் கட்டப் பெறுவானாயின் ஆறு மாதத்தில் இறப்பான். தண்ணீர் நெய் எண்ணெய் கண்ணாடி முதலியவற்றால் தன் தேகச்சாயையைக் காணாமல் இருந்தாலும் அவன் ஆறு மாதத்தில் இறப்பான் தன் தேகச்சாயயைக் காணாவிட்டாலும் சிரசில்லாத முண்டமாகக் காணப்படினும் ஒரு மாதத்தில் இறப்பான். இதுவரை அங்கத்தைப் பற்றிச் சொன்னேன்.
இனி வெளிக் குறியைப் பற்றி விவரிக்கிறேன்; சந்திர சூரிய மண்டலங்களைக் காந்தியின்றி ஆடையால் மூடப்பட்டதுபோல மங்கலாகக் காணும் மனிதன் பதினைந்து நாட்களில் உயிர்துறப்பான். அருந்ததியை ஆகாயத்தில் வாகனமில்லாமலும் சந்திரனிடம் களங்கமின்றியும் இரவில் நட்சத்திரங்கள் பிரகாசமின்றியும் மேகமின்றி மின்னவும் கண்டவன் ஆறு மாதத்தில் இறப்பான். திசைகளைக் கண்டு மயங்குவோன் ஆறு மாதத்தில் உயிர் துறப்பான். ஆகாயத்தில் இரவுக் காலத்தில் வானவில்லைக் கண்டவனும் பகற்காலத்தில் விண் வீழ்கொள்ளி விழக் காண்பவனும்; காகம் கழுகு முதலியன தன் தலைக்கு மேல் வட்டமிடக் கண்டவனும் ஆறு மாதத்தில் இறப்பான்.

ஆகாய வழியில் சப்தருஷி மண்டலத்தையும் சுவர்க்கமாகிய ஸ்வாதி மார்க்கத்தையும்  எவன் காணவில்லையோ, அவன் ஆறு மாதத்தில் இறப்பான். பருவம், அமாவாசையின்றியே சந்திர சூரியமண்டலத்தை இராகு மறைப்பது போலக் காண்பவனும் திக்குகள் சுழலக் காண்பவனும் ஆறு மாதத்தில் அழிவான். நீல வர்ணமான ஈக்கள் சாதாரண உடம்பை மொய்க்கக்கண்டவன் ஒரு மாதத்தில் மரணமடைவான். தன் சிரசில். கழுகு, காகம், மாடப் புறா முதலியன உட்கார கண்டவன் ஒரு மாதத்தில் உயிர் நீப்பான் ஆகாயத்தில் கரிய யானை காணப்பட்டால், ஆறுமாதத்தில் மரிப்பான். நிறம் ஐந்தும் சுவை ஆறும் பிறழ்வுற்றுக் காணப்படின் ஆறு மாதத்தில் இறப்பான். நாவின்முனையும் மூக்கின் முனையும் புருவ நடுவும் காணாவிடில் மூன்று மாதத்தில் இறப்பான். சேற்றிடையில் மிதித்த பாதச்சுவடு சிதைவுற்றுத் தோன்றுமானால் மரணஞ்சமீபத்தவனாவான். நான்கு புறத்திலும் வானவில் தோன்றினாலும் பகலில் கண் எதிரில் பேயாடினாலும் ஒரு மாதத்தில் உடல் துறப்பான். பூரித்த தேகமுடையோர் இளைத்தாலும் இளைத்த தேகமுடையவர் பூரித்தாலும் ஒருமாதத்தில் உடல் நீப்பார்கள் பேய், பூதம், நரி, கழுதை, அசுரர்; கருங்காக்கை புலி, செந்நாய், பருந்து குரங்கு முதலியன தன்மேல் ஏறவும் அவை தன்னைத் தின்னவும் அவற்றைத் தான் தின்னவுமாகிய இவற்றில் ஒன்றைக் கண்டவன் பதினைந்து நாட்களில் பூவுலகிலிருந்து அகல்வான். குரங்கின் மேலேறிக் கொண்டு கீழ்த்திசை நோக்கிச் செல்வதாகக் கனவு கண்டவன் ஒருபட்ச காலத்தில் இறப்பான்.

ஒருவன் தன் மரண தினத்தை அறிந்து கொள்ள விரும்புவானாயின் தூய நீராடி, புனிதமான ஆடையணிந்து நித்திய கர்மத்தை முடித்து சுக்கில பட்சமும் அமர பட்சமும் என்று முறையே சொல்லப்படுகிற வலது கையையும் இடது கையையும் தண்ணீரால் அலம்பி, சுத்தமான துணியால் துடைத்து, சுகந்தமான சந்தனத்தை இருகைகளிலும் எடுத்துக் கொண்டு, உள்ளங்கை இரண்டினாலும் சிறிது நேரம் குழைத்து கைகூப்பிக் கும்பிட்டவனாய் உமாபதியை ஒருமித்த மனத்துடன் தியானித்து நூற்றியெட்டுதரம் தேவி மந்திரத்தை ஜபித்து, கைகளைப் பிரித்து நோக்க விரல்களின் கணுக்கள் ஒன்றில் கருமை நிறமாகக் காணப்படும், சிறு விரல் முதல் பெருவிரல் இறுதியாக கணுக்கள் ஒவ்வொன்றிற்கும் மும்மூன்றாய் பதினைந்து துதிகள். ஆகையால் எந்தக் கையில் கருமை தோன்றுகிறதோ அந்தக் கைக்கு உரிய பக்ஷத்தில் அவன் இறப்பான் என்றும் கட்டை விரலின் அடிக்கணுமுதல் மேல் நோக்கிப் பிரதமையாதி திதிகளாக எண்ணிக்கொண்டு செல்கையில் எந்தத் திதியில் குறி காணப்படுகிறதோ அந்தத்திதியில் அவன் இறப்பான் என்று தெரிந்து கொள்ளலாம்.

இனி சுவாசத்தினால் (மூச்சுக் காற்றினால்) உணரத்தக்க மரணக் குறிகளாவன; க்ஷணம், துடி, வலம் நிமிஷம், காஷ்டைகலை, முகூர்த்தம், இரவு பகல், பக்ஷம், மாதம், ருது வருஷம் யுகம் கற்பம் மகா கற்பம் என்னும் சிரமத்துடன் இம்முறையாகச் சிவ பெருமான் சங்கரித்து வருகிறார். நாசி வழியில் ஓடும் சுவாசமானது பிங்கலை வழியாக ஐந்து தினங்கள் செல்லுமாயின் மூன்று ஆண்டுகளிலும் பத்து தினங்கள் ஓடுமாயின் இரண்டு வருஷத்திலும், பதினைந்து தினங்கள் ஓடுமாயின், ஒரு வருஷத்திலும் உடல் நீப்பான் இரண்டு நாசிகளிலும் இருபது நாள் சுவாசம் ஓடுமாயின் ஆறு மாதத்திலும் இருபத்தைந்து தினங்கள் ஓடுமாயின் மூன்று மாதத்திலும் இருபத்தேழு நாட்கள் ஓடுமாயின் ஒரு மாதத்திலும் உயிர் விடுவான். வலது நாசி வழியாக ஆறு தினங்கள் சுவாசம் சென்றால் இரண்டு வருஷம் ஏழு மாதம் பதினெட்டு நாள் ஜீவிப்பான் எட்டு தினங்கள் சென்றால் இரண்டு வருஷம் நான்கு மாதம் இருபத்து நான்கு நாட்கள் வாழ்வான். ஒன்பது தினங்கள் சென்றால் ஒருவருஷம் ஏழுமாதம் பன்னிரண்டு தினங்கள் பிழைத்திருப்பான். பதினோரு தினங்கள் சென்றால், ஒன்பது மாதம், எட்டு நாட்கள் உலகில் இருப்பான் பன்னிரு தினங்கள் சென்றால், ஏழு மாதம் பன்னிரண்டு தினங்கள் பிராணனோடு இருப்பான். இருபத்து மூன்று தினங்கள் சென்றால் நான்கு மாதம் ஆறுநாட்கள் வாழ்வான். முப்பது தினங்கள் சென்றால் ஒருமாதம் பத்துநாள் ஜீவித்திருப்பான் முப்பத் தொரு நாட்கள் அப்படியே சென்றால் ஐந்து தினங்கள் பிழைத்திருப்பான். வாய்வழியே சுவாசம் செல்லுமாயின் மூன்று தினங்களில் இறுதி மூச்சை விடுவான். இது தான் காலச்சக்கிர கிரமம். இதை நான் உனக்குச் சொல்லி விட்டேன்! இவ்வாறு சிவபெருமான் பார்வதிதேவிக்குத் திருவாய் மலர்ந்தருளியபடியே ஸனத்குமார முனிவர் வியாசருக்குக் கூறினார்.
 

தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :



1.விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது.

2.குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும்.

3.கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடையும்.

4.இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை  அருந்தினால், வாந்தி, குமட்டல்,  ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.

5.தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.

6.தேன், முட்டை,பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் சிக்காமல் தப்பலாம்.

7.மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்து தேன். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேய்த்து விட வேண்டும். தினமும் ஒரு ஸ்பூன் தேன் உட்கொண்டு வந்தால் மூட்டுகள் வலிக்காது. தேயாது.

8.தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

9.தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும்.

தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்

10. தேனும், சூடான வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும்.

Monday, 24 May 2021

பிரயோபவேசம், தலயாத்திரை, சுவர்க்கம்


ஒருவன் ஆகார வியவஹாரம் ஒன்றும் செய்யாமல் நியமத்தோடு தர்ப்பாசயனம் செய்து பகவானையே தியானித்துக் கொண்டு மரித்தால் அவன் வைகுந்தம் அடைவான். எனவே பிரயோபவேசம் பகவானுக்கு உகந்ததாகும். பிரயோபவேசம் செய்த நாட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வேள்வி செய்த பலன் கிடைக்கும். அவன் உலகியலின் உண்மையையும், வாழ்வியலின் இரகசியத்தையும், தெய்வீக இயலின் மெய்ம்மையையும், உணர்ந்து இனி உயிர் வாழ்க்கை வேண்டியதில்லை என்று, இனி மரித்து விடுவோம் எனத் துணிந்து அதை நல்ல முறையில் பிரயோபவேசம் செய்து நல்லுலகை அடைவான்.

விடு, மனைவி, மக்களை நெடுங்காலம் பிரிந்து, நெடுந்தூரம் தீர்த்த யாத்திரை செய்ய வேண்டும் என்ற வைராக்கியத்துடன் யாத்திரை செய்பவனுக்குப் பிரம்மாதி தேவர்களெல்லாம் வேண்டியவற்றைக் கொடுக்கிறார்கள். அப்படிச் செய்யும் ஒருவன் வழியில் மரித்தால் அவன் சுவர்க்கம் பெறுவான். மரண காலம் நெருங்கி விட்டதை உணர்ந்து, ஒருவன், விஷ்ணு க்ஷேத்திரம் ஒன்றில் மரிக்க எண்ணி யாத்திரை செய்ய நடந்தால், அவன் நடக்கும் அடி ஒன்றுக்கு ஒரு பசுவைத் தானம் செய்த பயனை அடைவான். தம்மவர்க்கு உதவி, அன்னியருக்கு உதவி செய்வதை விட தன் பெற்றோர்க்கு, உடன்பிறந்தோர்க்கு வேண்டியவற்றைக் கொடுப்பது சிறப்புடைத்து, தந்தைக்குக் கொடுத்தல் உத்தம பிராமணனுக்குக் கொடுத்த தான புண்ணியத்தை விட நூறு மடங்கு கிடைக்கும். தாய்க்குக் கொடுத்தால் ஆயிரம் மடங்கு அதிகம். உடன் பிறந்த ஆண், பெண்களுக்குக் கொடுத்தலும் அளவற்ற புண்ணியம் தரும்.

நல்ல ஒழுக்கத்திலும், நன்னெறியிலும் ஒழுகி, உயிரினங்களிருந்து உற்ற சமயத்தில் உதவி, பூதானம் செய்பவனைக் கண்டு புவிமகள் மகிழ்ச்சி அடைவாள். பூதானம் செய்தவனும், புனலில் மூழ்கியவனும், பஞ்சாக்கினி நடுவில் இருந்து தவம் செய்தவனும், வேள்விளைச் செய்தவனும், போரில் புறமுதுகிடாமல் முன்னேறியவனும் இகத்திலும், பரத்திலும் இன்பம் அடைவான்.

அயோத்தி, காஞ்சி, மதுரை, மாயா, காசி, அவந்தி, துவாரகா ஆகிய ஏழில் ஒன்றில் மரித்தால் நிரதிசய இன்ப வீடடைவான். சந்நியாசம் பெற்றவன், விஷ்ணு பக்தி செய்பவன், ஸ்ரீராம, கிருஷ்ண நாம உச்சாடனம் செய்வோர், அவ்வாறு செய்து கொண்டே இருக்கையில் மரித்தால் பேரின்ப வீடு அடைவர். திருத்துழாய் பயிரிட்டவன், அதற்கு நீர் பாய்ச்சியவன் நல்லுலகடைவான். ஆபத்திலுள்ள பசு, பிராமணன், குழந்தைகளைத் தன்னுயிரைக் பணயம் வைத்த காப்பாற்றுபவன் தேவர்கள் எதிர் கொள்ள சுவர்க்கம் அடைவான். ஸ்ரீரங்கம், காசி, குருக்ஷே ஷத்திரம், பிருகு க்ஷேத்திரம், பிரபாசதீர்த்தம், காஞ்சி, புஷ்கரம், பூதேஸ்வரம் ஆகிய புனித நகரங்களில் மாண்டவன் மோட்சமடைவான். வேத சாஸ்திரங்களை உணர்ந்தவர், கன்னிகை, பூமி, கிருகம், பசு, திலம், யானை, தானம் கொடுத்தோர், கிணறு, நடைவாவி, குளம், தேவாலயம் புதுப்பித்தோர் இவற்றைத் தோற்றுவித்தோரைக் காட்டிலும் அதிக புண்ணியம் பெற்று விண்ணுலகடைவர்.

தொடரும்...

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா
கருட புராணம் || தண்டனைகள்
---------------------------------------------
****************
அவீசி
----------
பொய்சாட்சி சொல்தல் பிறரைக் கெடுப்பது அடுத்தவர் மீது பழி போடுவது
*
நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்தப்படும்
**
கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

2. இறைவனிடம் பக்தன் எதையும் கேட்கக் கூடாது என்கிறது கருடபுராணம். இப்படி சொல்வது நமக்குப் புதுமையாக இருக்கும். நாம் விரும்பியதை எல்லாம் கேட்பதற்குத் தானே கடவுள் இருக்கிறார் என்று நினைக்கிறோம்.

ஒரு குழந்தைக்குத் தாய் பார்த்து பார்த்து, பணிவிடை செய்வாள். தூங்கும் குழந்தையைக் கூட எழுப்பி, பாவம் பசியோடு குழந்தை தூங்குகிறதே! என்று பாலூட்டுவாள். அதே போல் தான் இறைவனும்! அவர் தாயன்போடு நம்மை காத்தருள்கிறார். இந்த நம்பிக்கை ஒருவனுக்கு ஆழமாக இருந்தால், இதைக் கொடு அதைக் கொடு என்று கேட்கத் தோன்றாது.

பக்தனுக்கு எதை எப்போது கொடுக்கவேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் இறைவனைத் தவிர வேறொருவர் இல்லை. இதை உணர்ந்தவர்கள், இறைவா! உன் திருவடியில் நிரந்தரமான பக்தியை எனக்குக் கொடு! என்று மட்டும் கேட்பார்கள்

அப்போது அவன் அருகே இருக்கும் தூதர்கள் அவனைப் பார்த்து' முழு மூடனே! பூமியில் மனிதனாகப் பிறக்கும் வாய்ப்பைப் பெற்று, மானிட ஜென்மம் கிடைப்பது அரிது.

“அவன் இம்மைக்கும் மறுமைக்கும் தருமங்களையும் ஏராளமாகத் தான் வாழ்கின்ற காலமெல்லாம் செய்து புண்ணியங்களை சேர்த்திருக்கலாமே, அதை விட்டு மறுமைக்கு பயன் தராத பொருளைச் சேர்ப்பதிலேயே காலங்கழித்த மானிடனை என்னவென்று சொல்வது? பூமியில் வாழ்கின்ற காலத்திலேயே சேர்க்கிற நல்வினைத் தீவினைப் பயன்களை அடையாமல் உடலை இழந்து ஆவியான பின்பு எதையுமே செய்ய இயலாது.

“மண்ணுலகத்திலே ஆடம்பரமாக, அகம்பாவமாக, ஆனந்தமாகப் பெரியோரை மதிக்காமல் செல்வதும், உழைப்பாளியை உதைக்கச் செய்வதும் மனிதர்கள் செய்யும் புண்ணிய பாவங்களின் பயனேயாகும் என்பதை அறிவாயாக. இறந்தபின் நினைத்து என்ன பயன்?.

“கருடனே! உதக கும்பதானம் என்ற ஒருவகைத் தானமாக செய்யப்பட்டதாயின் ஜீவன், அந்த உதக கும்பத்திலுள்ள நீரைப் பருகியாவது சிறிதளவாவது தாகவிடாய் தீர்ந்து ஏழாம் மாதத்தில் அவ்விடத்தை விட்டு மீண்டும் நடந்து செல்வான்.

“இதுவரை பாதி தொலைவைக் கடந்தவனாய் அம்மாதத்தில் அவனுக்குரியவர் பூவுலகில் அன்னதானம் செய்ய வேண்டும். பிறகு அந்த ஜீவன் “பக்குவபதம்” என்ற பட்டினத்தைச் சார்ந்து எட்டாவது மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து நடந்து ‘துக்கதம்’ ஊரை அடைந்து உண்பான்.

“விருஷோற்சனம் செய்யாமையால் அநேகம் ஜீவர்கள் பிரேத ஜென்மத்தோடு அப்பட்டணத்தில் கூட்டம், கூட்டமாக கூடி, ஒ ஒ வென்று ஓயாமல் ஓலமிட்டுக் கதறிக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு கதறும் அச்சீவர்களை பாது அங்குவந்த ஜீவனும் கத்தி கதறிவிட்டு, அப்பால் நடந்து "அதத்தம்" என்ற ஊரையடைந்து பதினொன்றாம் மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து "சீதாப்ரம்" என்ற நரகத்தை அடைந்து அங்கு சீதத்தால் வருந்தி, பன்னிரெண்டாவது மாதத்து வருஷாப்தியப் பிண்டத்தை உண்டு, அங்கிருந்து புறப்பட்டு நான்கு திசைகளையும் பார்த்து ஈனக் குரலில், ‘யமகிங்கர்களே! என் உற்றார் உறவினர்களை காணோமே! ஏழையேன் என் செய்வேன்...’ என்று அழுவான்.

“அப்போது எமதூதர்கள் அந்த சீவனை நோக்கி, ‘முழுமூடனே! உன் மனைவி மக்கள் இன்னமுமாயிருப்பார்கள்? அவர்கள் மேல் உனக்குள்ள ஆசைகள் இன்னும் நீங்கவில்லையா? நீ செய்த புண்ணிய பாவங்களின் பயன்களைத்தான் இங்கு நீ காண முடியும்’ என்று அறைவார்கள். ‘ஐயோ! முன்னமே நீங்கள் சொன்னது மறந்து ஏதேதோ பிதற்றுகிறேன்...’ என்று தனக்குள் தானே மனம் புழுங்கி நடந்து வைவஸ்வத பட்டினம் என்ற நகரத்தைச் சேர்வதற்கு முன்பே ஊனற்பதிக பிண்டத்தை அருந்தி யமபுரி பட்டினமாகிய வைவஸ்வத பட்டினத்தை அடைவான்.

“யமபுரி நூற்றி நாற்பத்து நான்கு காதவழி அகலமுள்ளதால் காந்தர்வ அப்சரசுகளோடு கூடியதாய் என்பது நான்காயிரம் பிராணிகள் வாழுமிடமாகயிருக்கும் ஜீவன்கள் செய்யும் பாப புண்ணியங்கள் அறிந்து, எமதர்மனுக்குத் தெரிவிக்கும் பன்னிரண்டு சிரவணர்கள் என்பவர்கள் அந்த நகரில் இருப்பார்கள். ஜீவர்கள் அனைவரும் அந்தப் பன்னிரு சிரவணர்களையும் ஆராதனை செய்து ஆராதித்தால், ஜீவன் செய்த பாபங்களை யெல்லாம் மறைத்து புண்ணியங்களை மட்டும் சிரவணர்கள் யமதர்மராஜனுக்கு எடுத்துரைப்பார்கள் என்று திருமால் கூறியருளினார்.
உங்களின் உறவுகளை சிறு காரணத்திற்காக வெறுக்காதிர்கள்... விலக்காதீர்கள்.
அவர்களிடம் தவறு இருக்கிறதா?
உங்கள் கண்களை மூடிக்கொண்டு அவர்களுடன் கழித்த இனிமையான தருணங்களை, நாட்களை மனதால் அசை போடுங்கள்.....
வாழ்வில் சரியாக இருத்தலை விட அன்பாக இருத்தலே முக்கியம்.
நீங்கள் உங்களையே அணைத்துக்கொள்ள முடியாது...
உங்கள் தோள்களிலே அழவும் முடியாது...
வாழ்க்கை என்பது ஒருவருக்கொருவர் வாழ்வதே...
அதனால் உங்களை நேசிப்பவரை இழக்காதீர்கள்.
உறவுகளை பணத்தின் மொழியால் புரிந்து கொள்ள
ஏன் எனில் நம் எல்லா முதலீடுகளும் லாபம் கொடுக்காது. ஆனால் நம்மை உயர வைக்கும்.
குடும்பம், நட்பு, உறவுகள் எல்லாம் அது போன்ற ஒரு முதலீடுகளே....
பொறாமை , கோபம் , பேராசை இல்லாத வாழ்க்கைப் பாதையில் நீங்கள் பயணித்துப் பாருங்கள்,
நீங்கள் வாழும் வாழ்க்கைக்கு அழகான அர்த்தம் புரியும்...
சாதாரண நிலையில் உள்ளவரையும் மதிப்பை உயர்த்துவது பொருள் ஆகும் அந்த பொருளை விட சிறந்தது இல்லை

ஆதியும் நீயே
அந்தமும் நீயே
உணர்பவன் தானே
உனை சேர்வான்.
வேண்டியது நீ

வேண்டுகின்றேன் உனை

வேண்டியது என்றும்

வேறில்லை

வேதனை தீர்த்து விடு

வேங்குழல் நாதனே

வேங்கடவா
உன் அருள் கொடையில்
உலகம் இயக்கம்
உன் அன்பின் அரணில்
உயிர்கள் மயக்கம்
உன்னாலே மாதவா யாம்
உயர் பேறு பெற்றோம்

ஆசௌம், துர்மரணம், குழந்தை பாபங்கள்

18 புராணங்கள்
ப்ரம்ம புராணம்
பத்ம புராணம்
விஷ்ணு புராணம்
சிவ புராணம்
பாகவத புராணம்
நாரத புராணம்
மார்க்கண்டேய புராணம்
அக்னி புராணம்
பவிஷிய புராணம்
பரம்மவை வர்த்தன புராணம்
லிங்க புராணம்
வராஹ புராணம்
ஸ்கந்த புராணம்
வாமன புராணம்
கூர்ம புராணம்
மச்ச புராணம்
கருட புராணம்
பிரம்மாண்ட புராணம்

இன்றுடன் கருட புராணம் பகுதி நிறைவுபெறுகிறது
( யார் மனதையும் புண்படுத்தும் அபிப்பிராயம் இல்லை)
நாளை முதல்
வராஹ புராணம் ஆரம்பம்.
==============
பிராமணனுக்குப் புத்திரன் பிறந்தாலும், பிராமணன் இறந்தாலும், தாயாதிகளுக்கு பத்து நாள் வரையில் தீட்டு (ஆசௌசம்) உண்டு. ஆசௌசமுடையவர்கள் ஓமங்கள், தேவ ஆராதனை செய்யக்கூடாது. அந்த நாட்களில் அவர்கள் வீட்டில் யாரும் உணவருந்தக் கூடாது. அகால மரணம், அயல்நாட்டில் மரணம், மிருகங்களால் மரணம் ஆகியவற்றிற்கு உடனே கருமம் செய்யக்கூடாது. கிரியைகள் துவங்கப்படுகிற அன்று முதலே ஆசௌசம் உண்டாகும். ஒருவன் இறந்த செய்தி கேட்டவுடன் ஸ்நானம் செய்துவிட வேண்டும்.

திருமணக்கோலம் கொண்டிருக்கும் காலத்திலும், யாகஞ்செய்யும் காலத்திலும், உற்சவம் செய்ய கங்கணம் பூண்டிருக்கும் காலத்திலும் ஆசௌசம் இல்லை. ஓர் ஆசௌசம் நேர்ந்த காலத்தில் இடையிலே வேறொரு ஆசௌசம் வந்தால் முன்னதாக வந்ததுடன் பின்னர் வந்த ஆசௌசமும் தாயத்தார்க்கு நிவர்த்தியாகும். பசு, பிராமணர், மங்கையரைப் பாதுகாக்கும் விஷயத்திலும், யுத்த பூமியிலும், ஒருவன் தன் உயிரை இழந்தால் அவனைச் சேர்ந்தவர்களுக்கு ஒருநாள் மட்டுமே ஆசௌசம் உண்டு.

துர் மரணம் அடைந்தால்!

முந்நூற்று அறுபது பலாச இலைகளின் காம்புகளால் மரித்தவனது உடலைப் போல் ஒரு பிரதிமை செய்ய வேண்டும். சிரசுக்கு நாற்பது, கழுத்துக்குப் பத்து, மார்புக்கு இருபது, வயிற்றுக்கு இருபது, தொடைகளுக்கு நூறு, இமைக்கு இருபது. இரு கரங்களுக்கு நூறு, முழந்தாள்களுக்கு முப்பது, இனக்குறிக்கு நாலு, விருஷணங்களுக்கு ஆறு, கால்களுக்குப் பத்தும் வைத்து; மறுபடியும் சிரசுக்குத் தேங்காய், முகத்துக்குப் பஞ்சரத்தினம், நாவுக்கு வாழைப்பழம், மூக்கிற்கு எள்ளுப் பூவும், காதுக்கு எள்ளும், நரம்புக்குத் தாமரைத் தண்டும், தசைக்கு அன்னமும், இரத்தத்திற்குத் தேனும், மயிர்களுக்குச் சவுரியும், தோலுக்கு மான்தோலும், ஸ்தனப் பிரதேசத்திற்குக் குன்றிமணியும், நாபிக்குத் தாமரைப் பூவும், விருஷணர்களுக்குப் பனங்காயும், வைத்து சந்தன புஷ்பங்களால் அலங்கரித்து சாஸ்திர முறைப்படிக் கிருத்தியங்கள் செய்தால் துர்மரணம் அடைந்தவன் நற்கதி அடைவான்.

குழந்தைகளின் பாபங்கள்

நான்கு முதல் பன்னிரண்டு வயது வரை குழந்தைகள் செய்கிற பாபங்கள் அவர்களுடைய பெற்றோரையே சேரும். பெற்றோர்கள் இல்லை எனில் காப்பாளர்களைச் சேரும். அத்தகைய பாபங்களுக்காக அவர்கள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் செய்யும் பாவம் குழந்தைகளுக்குச் சேராது.

ஓம் பக்ஷ ராஜாய வித்மஹே
ஸ்வர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருடப் ப்ரசோதயாத்!

[கருட புராணம் முற்றிற்று.]

தீராத குடும்ப பிரச்சனை உள்ளதா? பித்ரு தோஷம் உள்ளதா? எவ்வாறு அறியலாம்?

குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்துருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்துருதோஷம், இந்த தோஷம் நமக்கு உள்ளதா என்பதை எளிமையாக கண்டறிய முடியும்.

ஜாதகத்தில் கண்டறிவது:
ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்துருதோஷம் உண்டு.

பரிகாரம்:
ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத் சென்று திவசம் செய்வதும், திரு வெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்திற்குப்பரிகாரம்.

திலஹோமம்:
குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டும் திலஹோமம் செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் இயற்கை மரணம் அடைந்திருந்தால் திலஹோமம் செய்ய வேண்டியதில்லை.

தோஷத்தினால் ஏற்படும் தீயவிளைவுகள் :
1.பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம் அல்லது அன்னியோன்னியம் இராது.அல்லது குழந்தைபாக்கியம் இருக்காது.
2. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதை.மனநோய் காரணமாக தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கும்.
3. ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.
4. கலப்புத்திருமணம், ரகசியதிருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.

தோஷம் வர பல்வேறு காரணம்:
1.கருச்சிதைவு
2. பெற்றோர்களை இறுதிக்காலத்தில் கவனிக்காதது.
3. இளைய தாரத்துப்பிள்ளைகள் மூத்தோருக்கு திதி தராதது.
4. தந்தைக்கு எத்தனை தாரம் இருந்தாலும் அனைவருக்கும் தவறாமல் திதி தர வேண்டும்.
5. ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர், ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும்.
6. துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயாசென்று சிரார்த்தம் செய்யாவிடில் பித்துரு தோஷம் வரும்.
7. தோஷத்தில் மிக கொடிய தோஷம் பித்துரு தோஷம்.
இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிஷ்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப்பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்துருக்களும், பித்துரு தேவதைகளும் தடை செய்வார்கள்.
பித்துருக்களின் சாபம் கடவுள் நமக்கு தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் தன்மையுடையது.

பரிகாரம்:
சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்யவும். இந்த அபிஷேகம் அமாவாசையன்று செய்யவும். இந்த அபிஷேகத்தைப்பார்த்த நாள் முதல் உங்கள் பித்துருதோஷம் விலகும்.
சிவன் கோயில் சென்று அபிஷேகம் செய்ய இயலாதவர்கள்
100 கிராம் பச்சரிசி, அகத்திக்கிரை, 50 கிராம் கருப்பு எள், 100 கிராம் வெல்லம், 1 வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை அன்று பசுமாட்டிற்கு கொடுக்க பித்துரு தோஷம் நீங்கும். தொடர்ந்து 9 அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தை செய்ய வேண்டும். இதனால் பித்துரு தோஷம் முழுமையாக நீங்கும்.

நடப்புப் பிறவியில் நல்லவராகவும், இறை வழிபாட்டில் ஈடுபட்டவராகவும், பிறருக்கு உதவி செய்பவராகவும் இருந்துவிட்டால், முற்பிறவி கர்மவினை அடியோடு அகன்றுவிடும் என்று சொல்ல இயலாது. நல்லவர்களும், ஞானிகளும், ஜீவன்முக்தர்களும்கூட துயரத்தை சந்திப்பது உண்டு!
தீக்குளித்தல், விஷம் அருந்துதல், தூக்குப் போட்டுக் கொள்ளுதல்- இவை துர்மரணமாகும். விபத்து, கொலை ஆகியவற்றை அகால மரணம், அபமிருத்யு என்பர். போரில் மடிந்தவர்கள், துஷ்ட சம்ஹாரங்கள் ஆகியன துர்மரணத்தில் வராது. துர்மரணம் நிகழ்ந்த பின் அதன் காரணத்தை ஆராய்வது வீண்!

கருடபுராணத்தில் சில

உலகில் உள்ள யோனிபேதங்கள் 84 லட்சம். அவை நான்கு பிரகாரமாய் உள்ளது
அவை அண்டசம், உற்பிசம், சராயுசம், சுவேதசம். அந்த நான்கு வகுப்பில்
முட்டையிலிருந்து 21 லட்சம் பறவை முதலியவைகளும்

பூமியிலிருந்து 21 லட்சம் மரம் முதலியவைகளும்

கருப்பையிலிருந்து 21 லட்சம் மனிதர்கள் முதலானவர்களும்

வியர்வையிலிருந்து 21 லட்சம் கிருமி முதலியவைகளும் தோன்றும்.
மனித உடலில் உள்ள 14 உலகங்கள்

உள்ளங்கால் ‌- அதலம்
கணைக்கால்‌ - விதலம்
முழங்கால் - சுதலம்
அதற்கு மேல் - நிதலம்
ஊரு - தலாதலம்
குக்யம் - ரசாதலம்
இடை - பாதாளம்
நாபி - பூலோகம்
வயிறு - புவர்லோகம்
ஹ்ருதயம் - சுவர்லோகம்
தோல் - மகாலோகம்
முகம் - ஜனோலோகம்
நெற்றி - தபோலோகம்
சிரசு - சத்தியலோகம்

கருட பத்து

ஓம் பூரணனே பதிணாறு திங்கள் சேரும் பொருந்தியே யருக்கன்பதி னெட்டுஞ் சேரும்
காரணனே கருமுகில் பொன் மேனி சேரும் கருணை பெரு மஷ்டாட்சரங் கலந்துவாழும்,
வாரணனே லட்சுமியோ டெட்டுஞ் சேரும் மதிமுகம் போல் நின்றிலங்கு மாயாநேயா,
ஆரணனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 1

வந்திரமோ அஷ்டசித்து மெட்டுஞ் சேரும் வாழ்கிரக மொன்பது வந்துசேரும்,
கந்திருவர் கணநாத ராசி வர்க்கம் கலைக்கியான நான் வேதங்கலந்து வாழும்
நந்தி முதல் தேவர்களுங் கவன யோகம் நமஸ்கரித்துன் பாதம் நாளும் போற்ற
அந்தரமாய் நிறைந்திருக்குங் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 2

மூலமுதலோ ரெழுத்து நீர்தானாகும் மூன்றெழுத்து மைந்தெழுத்து மொழியலாமோ,
சீலமுதல் ஓம்-அங்-உங்-மங்-றிங் கென்றே சிவனுடைய திருநாமம் நீர்தானாகும்
காலமுதல் ஓம்-அங்-உங்-மங்-றிங் கென்றே கருணை பெரு மிவ்வெழுத்து நீர்தானாகும்
ஆலவிஷங்கையேந்துங் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 3

நவ்வென்றும் கிலியென்றும் ஓம்சிவாயமென்றும் நமநம சிவசிவ ராரா வென்றும்
சவ்வென்றும் ஓங்கார ரீங்கார மாகித் தவமுடைய விவ்வெழுத்தும் நீர்தானாகும்
ஓவ்வென்று ஓம் நமோ நாராயணா வென்று உன்பாத முச்சரித்துகந்து போற்ற
அவ்வென்று ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 4

உதிக்கின்ற சிவசொரூபமுனக்கே யாகும் ஓம்-அவ்வும்-உவ்வுங்கிலியும் மென்றே
பதிக்கிசைந்த ஐந்தெழுத்தை வெளியில் விட்டே பச்சை முகில் மேனியனே பணிந்தேனுன்னை
விதிக்கிசைந்த மெய்பொருளே அரிகோவிந்தா விளக்கொளிபோல் மெய்த்தவமே
விரும்பித் தாதா
அதற்கிசைந்த நடம்புரியுங் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 5

வேதமுதலாயிருந்த சிங்க ரூபம் விளங்குகின்ற விரணியனை வதையே செய்தாய்
பூதமுதலாம் பிறவும் புண்ணிய நேயா புகழ்ந்தவர்க்குத் துணைவருவா யசோதை புத்ரா
நாதமுதல் விந்துவாயுயிருக் கெல்லாம் நயம் பெறவே நிறைந்திருக்கும் வரத பிர்ம
யாதவன் போல் நிறைந்திருக்கும் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 6

முக்கோணம் நாற்கோண மொழிந்தைங் கோண முச்சுடரே யறுகோண மெண்கோணமாகும்
சட்கோண நாற்பத்து முன்று கோணம் தந்திரமுஞ் சிதம்பரமுஞ் சகல சித்தும்
இக்கோண மிதுமுதலா வதார மட்டும் இறைய வனாய்த் தானிருந்து ரட்டித்தாலும்
அக்கோண மீதிருந்து கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 7

பச்சைமுகில் மேனியனே யுனக்கே யிந்தப் பார்தனிலே பத்தவ தார முண்டு
மச்சமென்றும் கூர்மமென்றும் வராகமென்றும் வாமனென்றும் ராமனென்றும்
பவுத்தனென்றும்
துஷ்டரை யடக்க மோகினி வேடங் கொண்டாய் தோன்றினா யுன்சொரூப மெல்லாம்
அறிவாருண்டோ
அச்சந்தீர்த்தெனையாளக் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 8

வேதியனாய் தோன்றி வந்தாய் மாபலிக்கு விண்ணவர்க்காய் நரசிங்க ரூபமானாய்
சாதியிலே யாதவனாய்க் கிருஷ்ணனாகத் தானுதித்து வந்திருந்தாய் தரணி வாழ்க
சோதனைகள் பார்த்திடுவோர் துதிப்போர் தம்மைத் துஷ்டரையும் வதை செய்து
லோகமாள்வாய்
ஆதிமுதலோரெழுத்தே நீ கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 9

மாயாவனே ரகுராமா அருகே வாவா வஞ்சனைகள் பறந்தோடநெஞ்சில் வாவா
காயாம் பூ நிறமுடனே கனவில் வாவா கருமுகில் மேனியனே என் கருத்தில் வாவா
நாயகனே யென்னாவி லிருக்க வாவா நாள்தோறு முன்பாதந் துதிக்க வாவா
ஆயர்குலத்துதித்தவனே கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 10

முப்புரத்தை யெரித்தவனே யிப்போ வாவா முகில் நிறனே ஜகநாதா முன்னே வாவா
எப்பொழுதுந்துதிப்பவர் பங்கில் வாவா ஏழைப்பங்கிலிருப்பவனே யிறங்கி வாவா
ஒப்பிலா மணிவிளக்கே யொளிபோல் வாவா ஓம் நமோ நாராயணாவுகந்து வாவா
அப்பனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 11

துளபமணி மார்பழகா சுகத்தைத் தாதா சுருதியே மெய்ப்பொருளே வரத்தைத் தாதா
களபகஸ்தூரியனே கடாட்சந் தாதா, கஞ்சனைமுன் வென்றவனே கருணை தாதா
பழம்பொருளே சிவஜோதி பாக்கியந் தாதா பத்திமுத்தி சித்திசெய்யவுன்பாதந் தாதா
அளவிலா மெய்பொருளே கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே! 12

விஷ்ணுவுக்கு கருடன் தந்த வரம்!


ஆணவமும், அகங்காரமும் கர்வமும் ஒருவன் புகழையும் பெருமையையும் அழித்து, அவனை மிகத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளிவிடும் என்பது தர்மநியாயம். ஆனால், தன் ஆணவத்தாலும் கர்வத்தாலும் விஷ்ணுவுக்கே சவால் விட்டு, அவரோடு போரிட்டுத் தோற்றுப் போனாலும், பெறற்கரிய பேற்றைப் பெற்றான் ஒருவன். அவன்தான், பகவான் விஷ்ணுவின் வாகனமாகப் பூஜிக்கப்படும் கருடன்.

#யார்இந்தக்கருடன்?

சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யப முனிவரின் மனைவிகளில் இருவர் கத்ரு, வினதை என்பவர்கள். இவர்கள் இருவரும் சகோதரிகள் என்றாலும், ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டிருந்தனர். ஒருமுறை, அவர்கள் இருவரும் கஸ்யப முனிவரிடம் குழந்தைகள் பெற வேண்டி வரம் கேட்டனர். கத்ரு, தனக்கு எல்லோரும் கண்டு பயப்படத்தக்க வலிமைமிக்க ஆயிரம் குழந்தைகள் வேண்டும் என வரம் கேட்டாள். கஸ்யபரும் வரத்தைத் தந்தார்.
வினதையும் தன் பங்குக்கு வரம் கேட்டாள். எனது சகோதரிக்குப் பிறக்கும் குழந்தைகளைவிட வலிமையும் தேஜஸும் ஆற்றலும் மிக்க ஓரிரண்டு குழந்தைகள் பெற, வரம் வேண்டும் என்று கேட்டாள் அவள். அவளுக்கும், அவள் விரும்பியது கிடைக்க வரமளித்தார் கஸ்யப முனிவர்.

சில காலம் கழித்து, கத்ருவுக்கு ஆயிரம் நாகங்கள் குழந்தைகளாகப் பிறந்தன. வினதை கர்ப்பத்தில் இரண்டு முட்டைகள் தோன்றின. அவற்றில் ஒன்றை அவசரமாக உடைத்தாள் வினதை. அதிலிருந்து இடுப்புக்கு கீழே வளர்ச்சி இல்லாத ஒரு குழந்தை பிறந்தது. பிறக்கும்போதே தன் அவசரத்தால் தன்னை ஊனமாக்கிய தாயை, அவள் கத்ருவின் அடிமையாக வாழ்வாள் எனச் சாபமிட்டது குழந்தை. அந்தக் குழந்தைதான் அருணன் எனப் பெயர் பெற்று, சூரிய பகவானின் தேரோட்டியாகி இன்றும் வணங்கப்படுகிறார்.

சிறிது காலம் கழித்து, இரண்டாவது முட்டையிலிருந்து மனித உடலுடனும். கழுகின் தலையுடனும் ஓர் அபூர்வ குழந்தை பிறந்தது. கோடி சூர்யப் பிரகாசத்துடனும். எவராலும் வெல்லமுடியாத உடல் பலத்துடனும் தோன்றிய அந்தக் குழந்தைதான் கருடன். அண்ணன் தந்த சாபத்தால் அடிமையான தாயை விடுதலை செய்யப் பிறந்த மகன் இவன்.

ஒருமுறை, கத்ருவுக்கும் வினதைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் வானத்தில் பார்த்த உச்சைசிரவஸ் என்ற தேவலோகக் குதிரையைப் பற்றிய விவாதம் அது. உச்சைசிரவஸ் முழுவதுமாக வெள்ளை நிறமானது என்றாள் வினதை. இல்லை இல்லை.... அதன் உடல்தான் வெள்ளை நிறம், ஆனால் வால் கறுப்பானது என்று வேண்டுமென்றே கூறினாள் கத்ரு.

இருவரில் யார் சொன்னது சரியோ, அவர்களே ஜெயிப்பார்கள்; மற்றவளும் அவள் குழந்தைகளும் ஜெயித்தவளுக்கு அடிமையாக வேண்டும் என்பது பந்தயம்! கத்ருவுக்கு தான் சொன்னது பொய் என்று தெரிந்தும், பந்தயத்துக்கு ஒப்புக்கொண்டாள். எப்படியும் வினதையை ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தன் பிள்ளைகளான நாகங்களில் கருமை நிறம் கொண்டவற்றை அழைத்து, உச்சைசிரவஸின் வாலைச் சுற்றிக்கொள்ளும்படிக் கட்டளையிட்டாள். அவர்களும் அதன்படியே செய்தார்கள். பிறகு கத்ருவும் வினதையும் உச்சைசிரஸ் குதிரையை உற்றுநோக்கினார்கள். அதன் வால் கறுப்பாகத் தெரிந்தது. தான் தோற்றுவிட்டதாகக் கருதி, தோல்வியை ஒப்புக்கொண்டாள் வினதை. தோல்வியை ஒப்புக்கொண்டதால், வினதையும் அவள் குழந்தைகளான அருணன், கருடன் ஆகியோரும், கத்ருவுக்கும் அவள் பெற்ற நாகங்களுக்கும் அடிமையாயினர்.

இப்படியே சில காலம் கழிந்தது. தாங்கள் ஏன் நாகங்களுக்கு அடிமையாக வாழ்கிறோம் என்பதைத் தாயிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட கருடன், அதிலிருந்து விடுபட வழி உண்டா என்றும் யோசித்தான். தன் சகோதரர்களான நாகங்களை அழைத்து, என்ன செய்தால் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று கேட்டான். மரணமில்லாமல் வாழ வேண்டுமென விரும்பிய கத்ருவும் நாகங்களும் தேவலோக அமிர்தத்தை எடுத்து வந்து எங்களுக்குக் கொடுத்தால்தான் நீங்கள் எல்லோரும் அடிமைத்தளையில் இருந்து விடுபட முடியும் என்று கூறினர்.

அதையடுத்து தேவலோகம் சென்றான் கருடன். இந்திரனைச் சந்தித்து தன் விருப்பத்தைக் கூறி, தேவலோக அமிர்தத்தைத் தருமாறு கேட்டான். நாகங்கள் மரணமில்லா வாழ்வு பெற்றால் உலகம் என்னாவது என்று யோசித்த இந்திரன். அமிர்தத்தைத் தர மறுத்தான்.

தன் பலத்தில் நம்பிக்கை கொண்டிருந்த கருடன், இந்திரனுடன் யுத்தம் செய்து, அவனை வென்று அமிர்த கலசத்தை அடைய விரும்பினான். அதையடுத்து, இருவரும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். கருடனுக்கும் இந்திரனுக்கும் நடந்த யுத்தத்தில் கருடனே வென்றான். தேவலோகத்தில் இருந்து அமிர்த கலசத்தை எடுத்துக்கொண்டு நாகங்களுக்குக் கொடுக்கப் புறப்பட்டான்.

இத்தனை சம்பவங்களையும் பார்த்துக்கொண்டிருந்த மகாவிஷ்ணு, அதன்பின்னரும் சும்மா இருக்க விரும்பவில்லை. அமிர்த கலசத்துடன் விண்வெளியில் பறந்து கொண்டிருந்த கருடனை வழிமறித்தார். விஷ நாகங்களுக்கு அமிர்தம் தந்தால், அவை மரணமில்லாமல் வாழ்ந்து, மனித இனத்தையும் தேவர்களையும் அழித்துவிடும். இது வேண்டாம் என அறிவுரை கூறினார்.

ஆனால், கருடனோ எதற்கும் செவி சாய்க்கவில்லை. அடிமைத் தளையிலிருந்து விடுபடவேண்டும் என்ற வெறியில் அவன் விஷ்ணுவையே துச்சமாகக் கருதினான். இந்திரனை வென்ற ஆணவத்தில், துணிவிருந்தால் என்னோடு போர் புரிந்து ஜெயித்து, அதன்பின்பு அமிர்த கலசத்தை நீங்களே தேவலோகத்தில் கொடுத்துவிடுங்கள் என்று விஷ்ணுவுக்கே சவால் விட்டான்.

சற்று நேரம் விஷ்ணு யோசித்தார். தன் தாயின்மீது கொண்ட பக்தியால் தேவேந்திரனையே எதிர்க்கத் துணிந்த கருடனின் வீரத்தை எண்ணி வியந்தார். அதோடு, அமிர்த கலசம் கையில் இருந்தும், அந்த அமிர்தத்தை தான் அருந்தி அழியாநிலை பெற விரும்பாமல் சென்றுகொண்டிருக்கும் அவனின் தன்னலமற்ற தன்மையை மனத்தால் பாராட்டினார். கருடனுக்குள் ஆணவமும் அகங்காரமும் இருந்தாலும் அவனுக்குள் இருந்த உயர்ந்த பண்புகளையும், அவனது விடுதலை வேட்கையையும் கண்டு வியந்த விஷ்ணு அவனோடு போரிடுவதைப் பெருமையாகக் கருதினார்.

விஷ்ணுவுக்கும் கருடனுக்கும் யுத்தம் ஆரம்பமானது. கஸ்யப முனிவரிடம் தான் கற்ற வித்தைகளையும் மாயா ஜாலங்களையும் காட்டிக் கடும் போர் புரிந்தான் கருடன். ஒரு தாய் தன் குழந்தையோடு விளையாடும்போது, தான் தோற்றுப் போவது போல நடிப்பாள். இது குழந்தையைச் சந்தோஷப்படுத்துவதற்காக! அது போல விஷ்ணுவும் கருடனை ஜெயிக்க வைப்பதுபோல நடித்துக்கொண்டு, அவனுடன் போர் செய்துகொண்டிருந்தார். வெற்றி தோல்வி நிர்ணயமாகாமல் 21 நாட்கள் போர் தொடர்ந்தது. அப்போது பகவான் விஷ்ணு கருடனுக்கு நல்வழிகாட்ட மீண்டும் முயற்சி செய்தார்.

கருடா! உன் தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நீ எடுத்துக்கொண்ட இந்த விடாமுயற்சியைப் பாராட்டுகிறேன். இருந்தாலும், எல்லா சாஸ்திரங்களும் கற்ற உனக்கு, தேவலோக அமிர்தத்தை எடுத்து நாகங்களுக்குக் கொடுப்பது தர்மமாகாது என்பது மட்டும் ஏன் தெரியவில்லை? நாம் வீணாகப் போர் புரிவதில் இருவருக்கும் லாபமில்லை. நீ வேண்டும் வரங்களைக் கேள். தருகிறேன்! என்றார்.

இப்போது என் கையில் உள்ள அமிர்த கலசத்தைத் திருப்பித் தரவேண்டும் என்றால், என் தாயும், சகோதரனும், நானும் அடிமைத்தளையில் இருந்து விடுபட வழிசெய்யுங்கள் என்று வரம் கேட்டிருக்கலாம் கருடன். ஆனால் கர்வம் தலைக்கேறியிருந்த கருடனுக்கு அப்படிக் கேட்கத் தோன்றவில்லை. நீ யார் எனக்கு வரம் தர? வேண்டுமானால் நீ ஏதாவது வரம் கேள். நான் தருகிறேன் அதன்பிறகாவது நான் செல்ல வழிவிடு! என்றான் கருடன், அகம்பாவமாக.

மகாவிஷ்ணு அப்போதும் விட்டுப் பிடித்தார். என்ன வரம் கேட்டாலும் தருவாயா? அப்புறம் வாக்குத் தவறமாட்டாயே? என்று கேட்டார். நான் வாக்குத் தவறமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும். தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றத்தான் உங்களையே எதிர்த்து நிற்கிறேன். என்ன வரமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றான் கருடன். அப்படியானால், நீயே எனக்கு வாகனமாகிப் பணிபுரியும் பாக்கியத்தை வரத்தைத் தா! என்றார் விஷ்ணு.

மகாவிஷ்ணுவின் இந்தப் பதிலால் கருடனின் கர்வம் வேரோடு அழிந்தது. அவனின் அகக்கண்கள் திறந்தன. அவன் விஷ்ணுவின் திருப்பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்தான். அவரை எதிர்த்துப் போரிட்டதற்காக மன்னிப்புக் கோரினான். தொடர்ந்து அமிர்த கலசத்தை விஷ்ணுவின் பாதத்தில் வைத்து நமஸ்கரித்தான். அமிர்தம் அருந்தாமலேயே, நீ மரணமில்லாமல் சிரஞ்சீவியாக என்னுடன் இருப்பாய் என்று விஷ்ணு ஆசி கூறினார்.

தொடர்ந்து, தான் கொண்டு சென்ற அமிர்த கலசத்தை தர்ப்பைகள் பரப்பி அதன்மீது வைத்தான் கருடன். அதை அவன் தேவேந்திரனிடம் திருப்பி அளித்த பிறகு, அமிர்த குடம் இருந்த தர்ப்பைகளை நாகங்கள் நக்கின. அப்போது அவற்றின் நாக்குகள் பிளவுபட்டன! ஸ்ரீமகாவிஷ்ணு கருணைகூர்ந்து விஷமில்லா நாகங்கள் பல காலம் வாழும். விஷமுள்ள நாகங்கள் சில காலம் வாழும். நல்ல நாகங்களை மனிதர்கள் பூஜித்து வழிபடுவார்கள் என்று அருளினார்.

தொடர்ந்து.... வினதையும் கருடனும், அவனது சகோதரனும் கத்ரு மற்றும் நாகங்களின் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டனர். கருடன் தன் தாய் வினதை மற்றும் கத்ரு ஆகியோரை வணங்கி ஆசிபெற்று விஷ்ணு சேவையில் தொடர்ந்து ஈடுபட்டான்.

எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் சந்நிதியை நோக்கி வணங்கியபடி நிற்கும் கருடனை நாம் கருடாழ்வார் என்றே அழைத்து பூஜிக்கிறோம். நாகங்களுக்கும் கருடனுக்கும் பகை என்றாலும், விஷ்ணுவின் சந்நிதியில் ஆதிசேஷன் எனும் நாகமும், கருடாழ்வாரும் நட்பு கொண்டே விஷ்ணு சேவை செய்கின்றனர்.

#விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய #பரிபூஜிதா!

#கருடபுராணம் || தண்டனைகள்
----------------------------------------
#மகாரௌரவநரகம்
---------------------------
மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

*********************

அதை பவுராணிகரான (புராணக்கதை வல்லுநர்) சூதமுனிவர், மற்ற ரிஷிகளுக்கு உபதேசித்தார். இப்புராணத்தில், நரகத்தை நிச்சயிக்கும் பாவங்களைப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து மீளவும் வழி சொல்லித் தருகிறது. துன்பம் வரும்போதும், வியாதிகள் வரும்போதும், இனி உயிர் வாழமாட்டோம் என்ற நிலை வரும் போதும் தான் கடவுளின் நினைப்பு நமக்கெல்லாம் வருகிறது. காலங்கடந்து உணர்வதில் பயனில்லை என்பதையும் இப்புராணம் நமக்கு உணர்த்துகிறது.

கருடபுராணத்தில் பிறப்பு, இறப்பு, தானம், தருமம், தவம், சடங்குகள், சொர்க்கம், நரகம், மறுபிறப்பு என்று மனித வாழ்க்கைக்குத் தேவையான எல்லா விவரங்களும் சொல்லப்பட்டுள்ளன. இப்புராணம் படித்துப் பயப்படுவதற்காக மட்டுமல்ல அல்ல: மனத்தைப்பக்குவப்படுத்திக் கொள்வதற்காகவும் தான்.

பொதுவாக, இதை வீடுகளில் வாசிப்பதில்லை. ஆனால், துக்கவீட்டில் இதை வாசித்தால், கேட்பவர்கள் சொர்க்கம் செல்வர் என்பது ஐதீகம். வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய புராணம் இது என்பது மட்டும் நிஜம்.
தவறுகள் குறைய இந்த கருடபுராணம் வழிவகுக்கும். மொத்தத்தில் அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும் என்பதை உணர்த்தும் நூல் கருடபுராணம்.

உலகில் உயிரினங்களுக்கு பிறப்பும் இறப்பும் எந்தக் காரணத்தால் உண்டாகின்றன? எந்த காரணத்தால் தீராத நோய்கள் வருகின்றன?

எதனால் முக்தி மோட்சம் கிடைக்கும்? ஜெனனம் எடுத்து பூமியிலே வாழ்ந்து வளர்ந்து அனுபவமடைந்து மரணம் அடைந்த பிறகு எந்தச் செய்கையால் சொர்க்கமும், நரகமும் அடைய நேரிடுகிறதென கூறப்படுகிறது? என்று நைமிசாரணியவாசிகள் கேட்டதற்கு சூதமா முனிவர் கூறிய புராணம் இது. வாழ்விற்கு அப்பால் ஜீவன் செல்லும் வழி வகைகளை விளக்கும் நூல்.

உன் அருள் கொடையில்
உலகம் இயக்கம்
உன் அன்பின் அரணில்
உயிர்கள் மயக்கம்
உன்னாலே மாதவா யாம்
உயர் பேறு பெற்றோம்
கிருஷ்ணா நீ எங்கே
உனை தேடி தேடி
உயிரே உருகிடும்
போது நீ
உயிரினுள் எங்கே
ஒளிந்து கொண்டாய்
கிருஷ்ணா

நீல மேகசியாமளா
நிலை கொண்ட
எங்கும் எதிலும்
நீக்கமற நிறைந்தவன்
ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணன்
நின் திருவடி
சரணம் என்றும்
சரணம் என் ஐயனே
சரணமையா...

உடலியல் பற்றிய விளக்கங்கள்


ஒரு சமயம் இந்திரனைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் பெண்களிடம் போய்ச் சேர்ந்தது. மாதவிலக்கான மங்கை நான்கு நாட்கள் வரையில் குடிமனைக்குப் புறம்பே இருக்கவேண்டும். அவளைப் பிறர் பார்க்கக் கூடாது. முதல் நாளன்று சண்டாள ஸ்திரீயைப் போலும், இரண்டாம் நாள் பிரமஹத்தி செய்தவள் போலவும், மூன்றாம் நாள் ஒலிப்பான் போலவும் காணப்படுவாள். நான்காவது நாள் ஸ்நானத்திற்குப் பிறகு சிறிது தூய்மை அடைவாள் போலவும் காணப்படுவாள். ஐந்தாம் நாள் சுத்தியடைந்து குடும்பக் காரியங்களைக் கவனிக்கும் தகுதி பெறுவாள்.

6 முதல் 18 நாள் வரை, ஏழு இரட்டை நாளில் அவளோடு கூடி மகிழ்ந்தால் ஆண் குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தை குணவானாக, தனவானாக, துர்மிஷ்டனாக, விஷ்ணு பக்தி உடையவனாக இருப்பான். ரஜஸ்வாலை ஆன ஐந்தாம் நாள் பாயசம் போன்ற மதுர பதார்த்தங்களையே உண்ண வேண்டும். தம்பதியர் சந்தனம், புஷ்பம், தாம்பூலம் கொண்டு குளிர்ந்த மெய்யினராய் மனதில் மோகமுடையவராய் கூடி மகிழ வேண்டும். அவ்வமயம் சுக்கில, சுரோணிதக் கலப்பால் ஸ்திரீ வயிற்றில். கரு ஏற்படும். சுக்கிலம் அதிகமானால் ஆண் குழந்தையும், சுரோணிதம் அதிகமானால் பெண் குழந்தையும் பிறக்கும்.

புணர்ந்த ஐந்தாவது நாள் கருவறையில் ஒரு குமிழியுண்டாகும். பதினான்கு நாட்களில் தசைகளும், இருபதாவது நாளில் மேலும் தசை அதிகமாகும். இருபத்தைந்தாவது நாளில் புஷ்டி அடையும். ஒரு மாதத்தில் பஞ்சபூத சேர்க்கை உண்டாகும். 2-ஆவது மாதத்தில் தோல், 3-ஆம் மாதத்தில் நரம்புகள் உண்டாகும். 4-ஆம் மாதத்தில் மயிர் புறவடிவம் ஏற்படும். 5-இல் காது, மூக்கு, மார்பு தோன்றும். ஆறில் சிரம், கழுத்து, பற்கள் உண்டாகும். 7-இல் பாலின் குறி தோன்றும். 8-இல் அனைத்து அவயவங்களுடன் ஜீவன் பிரவேசிக்கும். 9-இல் சுழிமுனை நாடி மூலம் பூர்வ ஜன்ம கர்மம் அறியும். பத்தில் குழந்தை பிறக்கும். பஞ்ச பூதாத்மகமாகிய உடல், பஞ்சேந்திரியங்களை அடைந்து இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று முக்கிய நாடிகளும், காந்தாரி, கஜசிம்மஹி, பூழை, அச்சு, அலாபு, குரு, விசாகினி என்ற ஏழுநாடிகளும் உடலில் முக்கியமானவை பெற்று தசவித வாயுக்கள் சேர்ந்துள்ளது. இந்தச் சரீரம். சுக்கிலம், எலும்பு, நீர், ரோமம், இரத்தம் ஆகிய ஆறு கோசங்கள் கொண்டது. உண்ணுகின்ற உணவின் சாரம் உடலில் பரப்புவது வாயு இவ்வாறு அண்டத்திலுள்ளவையெல்லாம் பிண்டத்திலுமுண்டு. பிண்டத்திலுள்ளவை எல்லாம் மனித உடலில் உள்ளன.

மனித உடலில் பதினான்கு உலகங்கள். சப்த குலாசலங்கள், தீவுகள், நவக்கிரகங்கள் இருக்கின்றன. ஒருவன் ஆயுள் அவனுடைய பூர்வ ஜன்ம கர்மானுசாரத்தை அனுசரித்து கருவிலுள்ள போதே பிரமன் நிச்சயித்து விடுகிறான். எனவே தீர்க்க ஆயுளும், உயர்ந்த வித்தையும், யோகமும், மற்ற யாவும் மறு ஜன்மத்திலாவது ஒருங்கே பெற்றிட ஜீவன் நற்கர்மங்களைச் செய்யவேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

தொடரும்...

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!

ஒருவன் வாழ்ந்து முடிந்து இறந்து போகும் போது அவனோடு நெடுங்காலம் வாழ்ந்த மனைவியும், பிள்ளைகளும், அவன் பாடுபட்டு சேமித்து வைத்த செல்வமும், இவையனைத்தும் வீடுவாயில் வரையில்தான் வரும். வாசலை தாண்டிவிட்டால் அவனுடைய இனத்தார், சுற்றத்தார் நண்பர்கள் இவர்கள் மயானம் மட்டுமே வருவார்கள். இதையெல்லாம் தாண்டி அவனது ஆன்மாவானது உடலைவிட்டுபிரிந்து தன் வழி போகும் போது மனைவி மக்கள் உறவினர் நண்பர்கள் இவர்கள் எவரும் உடன் வருவதில்லை. அதனால்தான் ஒருவன் தான் வாழுகின்ற காலத்தில் ஓரு சிறு தினை அளவிலாது அல்லது எள் அளவிலாது முன்பு நல்ல காரியம் தர்ம காரியம் செய்திருந்தால் அதன் பலன்கள் அப்போது துணை வரும். ஆன்மாவும் சிவலோகம் சென்றடையும் இது நிச்சயம்.
தெரியவேண்டியதே தெரிவிக்கப்படுகிறது !!
அறியவேண்டியதே அறிவிக்கப்படுகிறது !!
புரியவேண்டியதே புரிவிக்கப்படுகிறது !!
உன்னை நித்தமும் ! நிமிடமும் !! இடைவிடாது காத்தருளும் !!
உன்னை உன்னைவிட தெரிந்து ! அறிந்து ! புரிந்தவன் !! தயாவாலே !!
நாம் அவனை ! அவனாகவே ? தெரிய !! அறிய !! புரிய !! வில்லை ?? என்றாலும் ??
அவன் திருவருளே புரிவதையே செய்துகொண்டே இருக்கின்றான் !! பிறவிதோறும் !!நான் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவள்........என் கடைக்கண் பார்வையாள் இந்த பிரபஞ்சமே இயக்கிறது...........அனைத்துமே என்னுள் அடக்கம்.....நானோ பக்தனின் அன்புக்கு அடக்கம்.......இங்கு கடவுளை விட பக்தனே பெரியவன்..........


உடலியல் பற்றிய விளக்கங்கள்

“வைனதேயா! பஞ்ச பூதாத்மகமாகிய தேகமானது, பஞ்ச இந்திரியங்களை அடைத்து, பத்து நாடிகளில் அலங்கரிக்கப்பட்டு பிராண, அபான , வியான, உதாசன, சமான, நாக, கூர்ம, கிறுக, தேவதத்த, தனஞ்செயன் என்ற தச வித வாயக்களோடு சேர்ந்துள்ளது. மேலும் அந்த சரீரம், சுக்கிலம், எலும்பு, நீர், ரோமம், இரத்தம் என்ற ஆறு கோஷங்களுடனும் அமைந்துள்ளது. நரம்புகளால் கட்டப்பட்டிருக்கும் ஸ்தூல சரீரத்தில் (பருவுடலில்) “தோலும் எலும்பும் மயிரும், மாமிசமும், நகமும் பிரித்திவியின் (மண்ணின்) குணத்தால் உருவாகின்றன. பசி, தாகம், நித்திரை, சோம்பல், சாந்தி முதலியவை தேயுவின் (நெருப்பின்) குணமாகின்றன.

“இச்சை, கோபம், நாணம், பயம், மோகம், இயக்கம், சுழலுதல், ஓடுதல், கைகால்களை மடக்கி நீட்டுதல், ஒரு வினையும் செய்யாமலேயே இருத்தல் ஆகிய அனைத்தும் வாயுவின் (காற்றின்) குணமாகும்.

“சப்தம், எண்ணம், கேள்வி, காம்பீர்யம், சக்தி ஆகியவை ஆகாயத்தின் குணமாகும். காதுகள், கண்கள், மூக்கு, நாவு, தொக்கு ஆகிய ஐந்தும் ஞாநேந்திரியங்களாகும்.

“இடைபிங்கனல் மற்றும் சுழிமுனை என்ற மூன்றும் முக்கியமான பெரிய நாடிகளும், காந்தாரி, கஜ்சிம்மஹி, பூழை, யச்சு, அலாபு, குரு, விசாதினி என்ற ஏழு நாடிகளும், சரீரத்தின் மிக முக்கியமான பெரிய நாடிகளாகும்.

“ஜீவன் உண்ணுகிற சாறு முதலியவற்றை மேல சொன்ன வாயுவே, அந்ததந்த இடத்தைச் சேரும்படிச் செய்கிறது. வயிற்றில் அக்கினிக்கு மேல் தண்ணீரும், அந்தப் புனலுக்கு மேல் அன்னமும் உள்ளன. அந்த அக்கினியை வாயுவானது ஊதி விருத்தி செய்கிறது.

“சரீர முழுவதும் மூன்றரைக் கோடிக்கு மேற்பட்ட ரோமங்களும், முப்பத்தியிரண்டு பற்களும், இருபது நகங்களும், இருபத்தேழு கோடி கூந்தல் மயிர்களும் ஆயிரம் பலம் இறைச்சியும், நூறு பலம் இரத்தமும், பத்துப் பலம் மேதசும், பத்துப் பலம் தொக்கும், பன்னிரண்டு பலம் மஜ்ஜையும், மூன்று பலம் முக்கிய இரத்தமும், கபமும், மலமும், மூத்திரமும் முடிவாக அமைந்துள்ளன.

“அண்டத்திலுள்ள யெல்லாமே மனித தேகத்திலும் இருக்கின்றன. உள்ளங்காலை அதலலோகம் என்றும் , கணுக்காலை விதலம் என்றும், முழங்காலை சுதலம் என்றும், அதற்கு மேற்ப்பட்ட பகுதி நிதலம் என்றும் ஊறு, தராதலம் என்றும், குஷ்யந்தை ரசாதலம் என்றும், இடையைப் பாதளம் என்றும், நாபியை பூலோகம் என்றும், இதயத்தை சுவர்க்கலோகமென்றும், தோளை மகாலோகமேன்றும், முகத்தை ஜனலோகமென்றும், சிரசை சத்தியலோகமென்றும் சொல்லுகிறார்கள்.

"திரிகோணத்தை மேருகிரியென்றும், கீழ்க்கோணத்தை மந்தரபருவதம் என்றும், அந்த கோணத்துக்கு வலதுபுறம் கைலாயம் என்றும் இடதுபுறம் ஹிமாசலம் என்றும் தென்பாகம் கந்தமாதன் பர்வதம் என்றும், இடது உள்ளங்கையுலுள்ள ரேகை வருணபர்வதம் என்றும் வழங்கப்படும். எலும்பு நாவலந் தீவு என்றும், மேதசு, சரதகத் தீவு என்றும், தசை சூசைத் தீவு என்றும், நரம்பு கிரௌஞ்ச்சத் தீவு என்றும், தொக்குசான் மளித் தீவு என்றும், ரோமத்திரல் பிலட்சத் தீவு என்றும், நீர்பாற்க்கடல் என்றும், கபம் சுராசித்து என்றும், மஜ்ஜை நெய்க்கடல் என்றும், வாய் நீர் கறுப்பஞ்சாற்றுக் கடல் என்றும், இரத்தம் தயிர்க்கடல் என்றும், வாயில் உண்டாகும் இனிய புனல், சந்தோதக சிந்து என்றும் வழங்கப்படும்.

“சரீரத்தில் இரண்டு சக்கரங்கள் உள்ளன. அவற்றில் நாத சக்கரத்தில் சூரியனும், பிந்து சக்கரத்தில் சந்திரனும் நேத்திரங்களில் அங்காரகனும், இதயத்தில் புதனும், வாக்கில் தேவ குருவும், சுக்கிலத்தில் அசுர குரு சுக்கிரனும், நாபியில் சனியும், முகத்தில் ராகுவும், காலில் கேதுவும் உள்ளனர்.

“மனித உடலில் பதினான்கு உலகங்களும் சப்த குலாசலங்களும் தீவுகளும் நவகிரகங்களும் இருக்கும் வகையை மேலே சொன்னேன்.

“ஜீவன் கர்ப்ப வாசம் செய்யும் போது தானே, அந்த ஜீவனுக்கு ஆயுள் இவ்வளவு தான் என்றும், இன்ன வித்தை இவ்வளவு தான் என்றும் கோபம், யோகமும், போகமும் இவ்வளவுதான் என்றும், இன்ன சமயத்தில் இன்னவிதமான மரணமுண்டாகத் தக்கது என்றும், பூர்வ கர்மானுசாரத்தை அனுசரித்து, பிரம்மன் விதித்து நிச்சயித்து விடுகிறான்.

“ஆகையால் தீர்க்க ஆயுளும் உயர்ந்த வித்தையும் போகமும், யோகமும் - மற்ற யாவுமே ஜென்மத்திலாவது ஒருங்கே அடைவதற்காகவாவது, ஒரு ஜீவன் நற்கர்மங்களைச் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் அறிவித்துள்ளன.

“ஜீவன் தன பூர்வஜென்மத்தில் செய்த கர்மவினைப் பயனையே மறு ஜென்மத்தில் அடைகிறான் என்பதில் ஒரு சிறு சந்தேகமும் வேண்டியதில்லை. கருடா! இவை அனைத்தையும் உலக நன்மையைக் கருதிக் கூறுகிறேன். இனி கேட்க வேண்டியது எதுவாயிருந்தால், அதையும் கேட்கலாம்.” என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்...



ஶ்ரீ கருட பஞ்சாஶத்



பரிஷ்கார வர்ணகம் 08 / 10


கருடனுடைய திருக்கைகளுக்கு , வளைகளாக இருக்கும் , சேஷன் , குளிகன் எனும் நாகங்கள் , நம் பாவச் சுமையை , அழித்து அருள வேண்டும் !



ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேஶிகாய , நம:


 ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |

வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



ஶ்லிஷ்யத் - ருத்ரா , ஸுகீர்த்தி , ஸ்தந , தட , குஸ்ருண - ஆலேப , ஸங்க்ராந்த , ஸார ,

ஸ்ப்பார - ஆமோத - அபிலாஷ - உந்நமித , ப்ருது , பணா , சக்ரவாள - அபிராம: |

ப்ராய: , ப்ரேய: , படீர , த்ரும , விடப , தியா , ஶ்லிஷ்ட , பக்‌ஷீ - இந்த்ர , பாஹு: ;

வ்யாஹந்யாத் ! அஸ்மதீயம் , வ்ருஜிந , பரம்
- அஸௌ , வ்ருந்தஶோ , தந்தஶூக: ||



அணைத்துக் கொள்கிற  ருத்ரை , ஸுகீர்த்தி எனும் இரு மனைவியரின் கொங்கைத்  தடத்தில் உள்ள குங்குமக் குழம்பால் ஏற்பட்ட உயர்ந்த மிகுந்த மணத்தின் விருப்பத்தால் உயரத் தூக்கப் பட்ட பெரிய  வட்டமான படத்தால் அழகியதும் ;  பெரும்பாலும் பிரியமான சந்தன மரத்தின் கிளை எனும் எண்ணத்தால் கருடனுடைய ,

கைகளைத் தழுவி நிற்கிற இந்த சேஷன் , குளிகன் என்ற பாம்புகள் நம்முடைய பாபச் சுமையை கூட்டம் கூட்டமாக அழித்து அருள வேண்டும் !



ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

*கருடனுடைய  திருக்கைகளுக்கு  சேஷன் , குளிகன் என்னும்  இரு நாகங்கள்  அணியும் இரு வளைகளாக  உள்ளன .

* கருட பகவானை  அவருக்குத் தேவிகளான  ருத்ரையும்  ஸுகீர்த்தியும்  அணைத்துக் கொள்கின்றனர் .

* அப்பொழுது  அவர்கள் கொங்கைத் தடங்களில்  அணிந்துள்ள குங்குமக் குழம்பின்  மிகுந்த நறுமணம்  அவருடைய திருமார்பில்  வீசுகிறதாம் .

* அதை  முகர்ந்து கொள்ள ஆசையால்  அவருடைய கைகளில் வளையாய் உள்ள  இரு நாகங்களும்  தம்  பெரிய வட்டமான படங்களை  உயர தூக்குகின்றன .

* அந்த நிலை  மிக அழகாய் உள்ளதாம் .

* நாகங்களுக்குச்  சந்தன மரத்தில் எப்பொழுதும் பிரியம் அதிகம் .

* கருடனுடைய  திருக் கைகளை நோக்கும்போது  சந்தன மரத்தின் கிளைகளோ என்று  நாகங்களுக்கு தோன்றுகிறதாம் .

* அதனால்  கருடனுடைய திருக் கைகளை விடாது  வளைகள் போல்  இறுக அணைத்து உள்ளதாம் .

* இந்த நாகங்கள்  நம் பாவச்சுமையை  முழுதும் அழித்து  அருள வேண்டும் !

தானச் சிறப்பும், பலவகை தானங்களும் உயிர் பிரிதல்


உயிரானது மனித உடலை விட்டு நீங்கும் போது கண், நாசி (அ) உரோமக் கால்கள் வழியே நீங்குகிறது. ஞானிகளுக்குக் கபாலம் வெடித்து நீங்கும். பாவிகளுக்கு அபான வழியாக நீங்கும்.

மறுபிறவி:

காமக் குரோதர்கள், கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் உயிர் நீங்கும் போது அவையனைத்தும் மனத்தோடு ஒன்றாகும். சேதனனானவன் தனது கர்மத்தாலேயே மறுபிறவி அடைகிறான். மாயையோடு கூடிய தேகம் எல்லாப் பிராணிகளுக்கும் உரியதாகும். சமஸ்த லோகங்களுக்கும் உரிய சம்ஸ்த தேவர்களும் தேகத்திலேயே இருக்கிறார்கள்.

1. அனைத்துத் தானங்களிலும் சிறந்தது பருத்தி தானம். அதுவே மகாதானம் ஆகும். பூணூலுக்கும், மானங்காக்கும் ஆடைக்கும் பருத்தியே பயனுடையது. ஆதலால் அதுவே சிறப்புடைத்து. மேலும் பருத்தி தானம் செய்தால், வாழ்நாள் முடியும்போது சிவலோக வாசம் பிராப்தியாகும். மேலும், இத்தானத்தால் மாமுனிவர்களும், பிரம்ம, ருத்திர, இந்திராதி தேவர்களும் திருப்தி அடைவர். இத்தானம் செய்தவன் மீண்டும் பிறந்து யாவரும் புகழ நெடுங்காலம் வாழ்ந்து சொர்க்கமடைவான்.

2. திலதானம், கோதானம், புவி தானம், சொர்ணதானம், தானிய தானம், ஆகியவை பாபங்கள் அனைத்தையும் விலக்கிவிடும். இவற்றை உத்தம பிராமணர்களுக்கே தானமாக அளிக்க வேண்டும்.

(தானங்கள் செய்வதற்குச் சிறந்த காலம் ஜீவன் மரிக்கும் காலமே. கிரகண புண்ணிய காலத்திலும் கொடுக்கலாம்)

3. ஒருவன் மரிக்கும்போது திலம், இரும்பு, லவணம், பருத்தி, தானியம், பொன், பூமி, பசு ஆகியவற்றைத் தானம் செய்வது மிகவும் சிறந்ததாகும். எள், இரும்பு தானத்தால் யமன் மகிழ்ச்சி அடைவான். லவண தானம் யமபயம் நீக்கும். தானிய தானம் கூற்றுவன். அவன் தூதர்களுக்கு மகிழ்ச்சி தரும். சொர்ண தானம், கோதானம் பாவத்தை அழிக்கும். மரணமடைபவன் பகவானைத் தியானித்து, அவன் நாமம் உச்சரித்தால் அவன் நிரதிசய வீடாகிய வைகுந்தம் அடைவான்.

யமன் ஆயுதங்களாகிய கூடாரம், முசலம், சூரிகை, தண்டம் யாவும் இரும்பால் ஆனவையே. எனவே இரும்புதானம் யமனை மகிழ்விக்கும். அந்தக் கிரகத்தில் யமதூதர்கள் கால் வைக்க அஞ்சுவர். சர்வம் விஷ்ணுமயம் ஜகத் ஜம்பூதங்கள், தானப் பொருள்கள், இந்திராதி தேவர்கள் யாவும் பகவான் விஷ்ணுவே. கொடுப்பவனும், எடுப்பவனும் அந்த பகவானே. ஒருவன் புத்தியைப் பாவபுண்ணியங்களில் நாடச் செய்வதும் அந்த விஷ்ணுவே.

தொடரும்...

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!
🌸🌸🌸🌸🌸🌸
கருட கமன தவ, சரண கமல மிஹ, மனஸி லஸது மம நித்யம் |
மம தாபம பாகுரு தேவ, மம பாபம பாகுரு தேவ ||

ஜலஜ நயன விதி, நமுசி ஹரண முக, விபூத வினுத பத பத்ம |
மம தாபம பாகுரு தேவ, மம பாபம பாகுரு தேவ ||

புஜக ஷயன பவ, மதன ஜனக மம, ஜனன மரண பய ஹாரி |
மம தாபம பாகுரு தேவ, மம பாபம பாகுரு தேவ ||

ஷங்க சக்ர தர, துஷ்ட தைத்ய ஹர, ஸர்வ லோக சரண |
மம தாபம பாகுரு தேவ, மம பாபம பாகுரு தேவ ||

அகணித குண கண, அஷரண ஷரணத, விதலித சுரரிபு ஜால |
மம தாபம பாகுரு தேவ, மம பாபம பாகுரு தேவ ||

பக்த வர்ய்ய மிஹ, பூரி கருணயா, பாஹி பாரதி தீர்த்தம் |
மம தாபம பாகுரு தேவ, மம பாபம பாகுரு தேவ ||
🌸🌸🌸🌸
கருடபுராணம்// தண்டனை அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.

நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது.

வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

🌸🌸🌸🌸🌸
நீ மற்றவர்களுக்கு  தானம் தர்மம் செய்கிறாய் உனக்காக உதவி செய்ய
யாருமில்லை என்று வருந்தாதே மனமே யாருடைய உதவியும் இல்லாமல் உன்னால் வாழ முடியும் முன்னேற்றம் அடைய முடியும்...
🦚🦚

தானம் பலவகை..
விதை தானம்,
அசுவ தானம்,
கன்னிகா தானம்,
அன்ன தானம்,
சொர்ண தானம்,
கோ தானம்,
பூ தானம்,
ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்தில் முக்கியமானது,
உலகில் எல்லா தானத்தையும் விட கண் தானம் மிக சிறந்தது.காரணம் நம்மால் பார்வை இழந்த ஒருவர் பார்வை அடைகிறார்.அவர்க்கு கிடைத்த கண்ணால் உலகை பார்க்கும் பொழுது அவருக்கு கிடைக்கும் மகிழ்ச்சி மிக மிக  அதிகம்.  இந்த வாழ்வின் வாழ்ந்த பயனும் நமக்கும்  கிடைக்கிறது.
இவற்றையெல்லாம் விட சிறந்தது....
.. கண் தானம்.....
🌸🌸🌸🌸  

மனிதன் ஏழு பிறவி எடுக்கிறான் என்று பலரும் கூறினார்கள் அது என்ன என காண்போம்
🌸🌸🌸🌸
அதில் இறைவன் மனிதனாக பிறப்பது ஒன்று மனிதன் மீண்டும் மனிதனாக பிறப்பது இரண்டு .  

மிருகங்கள் மறுபிறவி மனிதனாய் பிறப்பது மூன்று.  

பறவைகள் மறுபிறவி மனிதனாய் பிறப்பது நான்கு.   

நீர்வாழ் பூச்சிகள் மறுபிறவி மனிதனாய் பிறப்பது ஐந்து.

 ஊர்வன மறுபிறவி மனிதனாய் பிறப்பது ஆறு

.தாவரங்கள் மறுபிறவி மனிதனாய் பிறப்பது ஏழு .

இதுவே மனிதனின் ஏழுபிறவியாகும் .

அதில் குணங்கள் மாறுபட அதுவே காரணம் என்று கூறுகிறார் .

தேவர்கள் மனிதராய் பிறந்தால் தானம் செய்வார்கள் நன்மைகள் உரைப்பார் கோவில் மடம் கட்டுவர் தவம் செய்வர் லிங்கபூஜை யோகம் யாகம் செய்வர் எனவுரைக்கிறார் .

மனிதன் மனிதனாகவே பிறந்தால் தியானம் செய்வார் பெரியோரை போற்றி வாழ்வர் அன்னதானம் செய்வார்கள் எனவுரைக்கிறார்

 மிருகம் மனிதராய் பிறந்தால் ஊர்தனில் சண்டை செய்வான் தரமற்ற வார்த்தைகள் பேசுவான் தானதருமமஎதுவும் எதுவும் செய்யமாட்டான் முன்பின் பாராது நடப்பான் எனவுரைக்கிறார்

 பட்சிகள் மனிதராய் பிறந்தால் அன்னம்கேட்டாலும் இல்லை எனகூறி மனம்நோகபேசுவான் வெறும் பேச்சு வீம்பு செய்துஊர்திரிவான் நல் விசயம் காதில் கேட்கமாட்டான் சூடு சுரணை இல்லான் எனவுரைக்கிறார்  ..

நீர் வாழ்வினம் மனிதராய் பிறந்தால் ஊர்தோறும் சாதி சொல்லி சண்டை செய்து கொலை களவு செய்வான் பலவகை சதி செய்து பெரியோரை பழி சொல்வான் நல்வாழ்வை கெடுப்பான் எனவுரைக்கிறார்

 ஊர்வன மனிதராய் பிறந்தால் புத்தி கெட்டுபரிதவிப்பர் நன்மை யறியான் தீமையறியான் நற்சொல் கேளாதுபோவான் எனவுரைக்கிறார்  

தாவரம் மனிதராய் பிறந்தால் தவத்தை கெடுத்து பேய்போல திரிந்தலைவார்  நீதி நெறி காணாதிருப்பான் காடே கதியென மரமறுப்பான் மிருகங்களை கொன்றுதின்பான் எனவுரைக்கிறார்.  

ஏழுவகை பிறவி பலன்களையும் அகத்தியர் பெருமான் உரைக்கிறார்   
🌸🌸🌸🌸🌸

6 வகை தானங்கள்
தானம் செய்யும் போது உங்களை அறியாமல் ஒரு கர்வம் ஒட்டிக்கொள்ளும். எப்பாடுபட்டாவது அதை துடைத்து எறியுங்கள். நடக்கும் எந்த ஒரு காரியத்திற்கும் கண்டிப்பாக ஒரு பின்னணி இருக்கும். நீங்கள் ஒரு சிறு கருவி மட்டுமே. ஆட்டுபவனும், ஆடுபவனும் அந்த சிவமே. உங்கள் வாழ்வில் எந்த தானம் செய்தால் என்ன பலன்கள் என்ற விவரம் வருமாறு:-

ஆடைகள் : ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்து விடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடை தானம் செய்வது மிக நல்லது. வியாழக்கிழமையன்று ஆடை தானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்கிய விருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.

தேன் : புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று (இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.

நெய் : பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6, 8, 12-ம் அதிபதியின் திசை) நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கல கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். சகலவிதமான நோய்களும் தீரும்.

தீபம் : இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும். அல்லது ஏழைகளுக்கும், கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.

அரிசி : பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலக ஏழைகளுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும். யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.

கம்பளி - பருத்தி : வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளி தானம் செய்தால் நோய் தீரும். வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்தி தானம் (பருத்தி உடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.
🌸🌸🌸🌸🌸
எந்த ராசிக்காரர் என்ன தானம் செய்ய வேண்டும்!!!

மேஷம்:

 மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும்.
சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும்.

பணக்காரராக விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும்.

ரிஷபம்:

 ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும்.

மேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்:

 மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம்செய்து வெண் பொங்கலை உங்களால் முடிந்த அளவுக்கு தானம் கொடுங்கள்.

எல்லாவித செல்வமும் தேடி வரும்.மேலும் ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பண தானம் கொடுப்பதும் நல்லது.

கடகம்:

 கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும்.

மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் உங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

சிம்மம்:

 சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக் கொடுங்கள். அது புண்ணியத்தை சேர்க்கும்.

கன்னி:

 கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும்.

மேலும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்கலாம். இது உங்களை முன்னேற்றும்.

துலாம்:

 துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல்தானம் செய்யுங்கள். இதனால் புதிய சொத்துக்கள் வந்து உங்களுக்கு சேரும். மேலும் ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுத்தால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.

விருச்சகம்:

 விருச்சக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். கடன்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம்.

மேலும் அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும்.

தனுசு:

 தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம்.

வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம். மேலும் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம்செய்தால் வாழ்வு செழிக்கும். மேலும் வயதான பெண்களுக்கு தானம் செய்தால் நல்லது.

மகரம்:

 மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும்.

மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். கோவில்களில் சீரமைப்பு பணிகள் நடக்கும்போது தானம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

கும்பம்:

 கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும்.

இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும். மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை வாங்கி கொடுத்தால் வளமான வாழ்வு அமையும்.

மீனம்:

 மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது.

ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். அய்யப்ப பக்தர்களுக்கு உதவினால் கூடுதல் நன்மை உண்டாகும்🌸🌸🌸🌸

(1)  
வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல  கோளாறுகள்
வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ
பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம்
உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும்.  இதன் சக்தியை மூன்றே நாட்களில்
உணரலாம்.

(2)  
நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால்
தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க
வீண் விரயம் கட்டுப்படும்.

(3)  
மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம், சோர்வு
போன்றவை நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு
அருகில் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும். காலையில்
சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும். அதை குடிக்க கூடாது.

(4)  
காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில்
ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டி வர பய உணர்ச்சிகள் குறையும்.

(5)  
தற்கொலை எண்ணங்கள் மேலும் வாழ பிடிக்காதது போன்ற உணர்வுகள்
தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம்.
மூக்குத்தி அணிய வேண்டியதில்லை.

அமானுஷ்ய பரிகாரங்கள்

(1)  வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது
(2)     காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம்,
ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்

(3)        இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும்

(4)         வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து  கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்

(5)    காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும்

(6)    சமையலறையும், படுக்கையறையும் அருகருகே இருக்கும் படி அமைத்து
கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.

(7)    துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி  கொத்தை தொங்க விட வேண்டும்.
 

எள்,தருப்பை ஏன்?


கருமங்களைச் செய்வதற்கு முன் குறிப்பிட்ட இடத்தை திருவலகால் துடைத்துத் தூய்மை செய்து கோமியத்தால் மெழுக வேண்டும். அவ்வாறு தூய்மையான இடத்தில் கருமம் செய்யத் துவங்கினால் தேவர்கள் அங்கு வந்து அக்கருமங்களை நிறைவேறச் செய்வார்கள். இல்லாவிடில் அவ்விடத்தை அசுரரும், பூதங்களும், பிரேதங்களும், பைசாசங்களும் கருமங்களைத் தடுத்தி நிறுத்தி விடுவதுடன், இறந்தவன் நரகத்தை அடைய நேரிடும். எள் மிகவும் தூய்மையான ஒரு தானியம். கருப்பு எள், வெள்ளை எள் எதுவானாலும் தானத்துடன் கொடுத்தால் அதிகப் பயன் உண்டாகும். சிரார்த்த காலத்தில் கருப்பு எள்ளைச் சேர்த்தால் பிதுர்த் தேவர்கள் மிகவும் திருப்தியடைவார்கள். தர்ப்பைப் புல் ஆகாயத்தினின்று தோன்றியது. அதன் ஒரு முனையில் பிரம்மனும், மற்றொன்றில் சிவனும், நடுவில் விஷ்ணுவும் வாசம் செய்கின்றனர். பிராமணர்க்கும் மந்திரத்திற்கும், தர்ப்பைக்கும், அக்கினிக்கும், திருத்துழாய்க்கும் நிர்மாலிய தோஷமில்லை.

ஏகாதசி விரதம், துளசி, பகவத் கீதை, பசு, பிராம்மண பக்தி, ஸ்ரீஹரியின் சரணமும் சம்சார சாகரத்தைக் கடக்க வேண்டியவருக்கு நல்ல தெப்பமாகும். இறக்கும் நிலையை அடைந்தவன் கோமயத்தில் மெழுகப்பட்ட தலத்தில், சூரைப்புல்லைப் (தருப்பையை) பரப்பி, அதன் மேல் எள்ளை இரைத்து, அதன்மீது சயனித்து தருப்பை, திருத்துழாய் கையிலேந்தி பகவன் நாமாவை வாயாரப் புகழ்ந்த வண்ணம் மரிப்பவன் அயன், அரியாதியர்க்கும் அரிய நிரதிசய இன்பவீடாகிய பரமபதம் அடைவான். உயிர் நீங்கும் முன்பே திருத்துழாயோடு தனது நல்லுலக வாழ்வைக் கருதி தானங்களைச் செய்துவிட வேண்டும். உப்பு தானம் மிகவும் சிறந்ததாகும். அது விஷ்ணு லோகத்தில் உண்டானது. உப்பு தானம் செய்து மரித்தவன் சொர்க்க லோகத்தை அடைவான்.

தொடரும்...

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!
🌸🌸🌸🌸
#கருடபுராணம் #தண்டனை
&&&&&&&&&&&&
#கிருமிபோஜனம்:
)) =) =))) ========))))
தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.
🌸🌸🌸🌸🌸
👉இவை அனைத்தையும் செய்ய முடியவில்லை என்றாலும், ஆடி மாத அமாவாசை தர்ப்பணமும், தை மாத அமாவாசை தர்ப்பணமும் அவசியம் செய்ய வேண்டும். ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டிய சிராத்தம் விட்டுப்போனால் (தீட்டு ஏற்படுவதால்) மஹாளயபட்சம் அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும்.
👉இந்தப் புனிதமான தர்ப்பணங்களை உத்தராயன, தட்சிணாயன காலங்களில் செய்யாமல் இருந்தால், குழந்தையின்மை, கருக்கலைவு, குடும்பத் தகராறு, ஆரோக்கியக் குறைபாடு, அகால மரணம், திருமணத் தடை, தீய பழக்கங்கள், ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு, மூளை வளர்ச்சிக் குறைவுள்ள குழந்தைப் பிறப்பு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெற்று, நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம்.
👉இவை பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் திகழ்கின்றன.
👉இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி, நிம்மதியற்ற வாழ்க்கையைத் தந்துவிடும்.
👉ஆத்மகாரகனாகிய சூரியனும், மனோகாரகனாகிய சந்திரனும் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இணைவார்கள்.
👉இதையே அமாவாசை என்கிறோம். சூரியன் என்பதை பித்ருகாரகன் என்றும், சந்திரன் என்பதை மாத்ருகாரகன் என்றும் சொல்கிறது ஜோதிடம்.
👉ஆகவே சூரியன், சந்திரன் இணைகிற அமாவாசையில், இறந்த தாய், தந்தை மற்றும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆராதிப்பது சிறப்பு என்கிறது சாஸ்திரம்.
👉கிட்டத்தட்ட, நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.
🙏🙏🙏
👉ஆனால் இவை அனைத்துமே இறந்த முன்னோர்களுக்காகச் செய்யப்படுகிற சடங்குகள். இவை நம் முன்னோர்களைச் சென்றடைந்து, அவர்களின் ஆத்மாக்களைக் குளிர்வித்து, நமக்கு அவர்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும் என்பது சத்திய வாக்கு.🙏
👉நவீன உலகம், விஞ்ஞான யுகம், கணினி யுகம் என்று காலம் வேகமாக மாறிவிட்டது.
👉 'என் வாழ்க்கையே இயந்திரமயமாகிவிட்டது. தர்ப்பணம் செய்யவே நேரம் இல்லை’ என்று அங்கலாய்க்கிறார்கள் பலர்.
👉மாதத்தில் ஒரே ஒருமுறை வருகிற அமாவாசைக்கே இப்படிச் சொல்கிறார்கள். ஆனால், வருடத்துக்கு 96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது வேதம்.
👉ஆகவே, எந்தச் சாக்குப் போக்கும் சொல்லாமல், தட்டிக் கழிக்காமல் முன்னோரை உரிய காலத்தில் வழிபடுவது நமக்கு நன்மை பயக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
🙏🙏🙏
👉மனிதர்கள் தாம் வாழும் காலத்தில், தான தருமங்கள் செய்து வருதல் வேண்டும். நம்மைப் பெற்ற தாய், தகப்பன் உயிருடன் இருக்கும் காலத்தில், அவர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்வதே மிகப் பெரிய தர்மம் ஆகும்.
👉இறந்த பின்பு செய்கின்ற தானத்தைவிட, இருக்கும்போது அவர்களுக்கு மூன்று வேளையும் நல்ல ஆகாரம் கொடுப்பதே மிகப் பெரிய தர்மம் என்கிறது கருடபுராணம்.
👉சிராத்தம், தர்ப்பணம், பித்ரு காரியம், படையல் என்றெல்லாம் பல்வேறு வார்த்தைகள் புழக்கத்தில் இருந்தாலும், அவை அனைத்தும் ஒன்றையே குறிப்பன ஆகும். நதிகள் பல இடங்களில் உற்பத்தியாகி, பல ஊர்களின் வழியாக வரும்போது, அவை ஆறு என்று பெயர் பெற்று சமுத்திரத்தில் கலக்கின்றன.
👉அதுபோல், நாம் செய்கிற சிராத்தம், ஒவ்வொரு வருடமும் நம் முன்னோர் இறந்த திதியில் செய்யப்படுவது. தர்ப்பணம் என்பது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யப்படுகிறது. படையல் என்பது வருடத்துக்கு ஒருமுறை செய்யப்படுவது.
🌸🌸🌸🌸
👉ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில்தான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
👉 நம் முன்னோர் எந்தத் திதியில் இறந்தார்களோ, அந்தத் திதி மற்றும் அந்த பட்சம், அந்த மாதம் ஆகியவற்றில் சிராத்தம் செய்ய வேண்டும்.
👉இறந்த நாளில் செய்ய வேண்டிய சிராத்தத்தை ஒரு சிலர், இறந்த நட்சத்திரத்தில் செய்கிறார்கள்.
அதைத் தவிர்ப்பது உத்தமம்.
👉ஏனென்றால், அன்றைய தினம் திதி மாறி வர வாய்ப்பு உள்ளது.
👉அதனால், இறந்த திதியில் சிராத்தம் செய்வதே சிறப்பு!
👉மனிதர்கள் தாம் வாழும் காலத்தில், தான தருமங்கள் செய்து வருதல் வேண்டும்.
👈நம்மைப் பெற்ற தாய், தகப்பன் உயிருடன் இருக்கும் காலத்தில், அவர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்வதே மிகப் பெரிய தர்மம் ஆகும்
👇👇👇👇👇👇👇👇
உடனே ஒரு நொடி நேரத்திற்குள் சீவனின் இல்லத்திற்கே கொண்டு வந்து விட்டு விடுவார்கள்.
🥵ஆவி வடிவுடைய அந்த உயிர் சுடுகாட்டிலே தன் சிதைக்கு பத்து முழ உயரத்தில் நின்று, தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரியும் தன் உடலைப் பார்த்து, ‘அந்தோ! ஐயையோ...!’ என்று ஓலமிட்டு அழும்.
🔥“தீயிலோ உடல் எரிந்து வெந்து சாம்பலாகும் போது தன் உறவு பொருள் மீது இருந்த ஆசையானது ஒழியாது.
🌸அவன் வாழ்ந்த வீட்டின் முன்பு நின்று, அங்கு இருப்பவர்களைப் பார்த்து பசி தாகத்தால் ‘ஆ..ஆ...’ என்று கதறி பதறி நிற்பான்.
“ஜீவனுக்குப் பிண்டத்தலான சரீரம் உண்டாகும்.
புத்திரன் பத்து நாட்கள் போடும் பிண்டத்தால் சரீரம் முழுவதும் பூரணமாக உண்டாகும்.
பன்னிரெண்டாம் நாளில் பிராமணர் மூலமாய் புத்திரனால் கொடுக்கப்பட்டவற்றை உண்டு, பதின்மூன்றாம் நாளன்று பிண்டவுருவத்தில் பாசத்தால் பிணித்து கட்டிப் பிடித்துக் கொண்டு போகும் போது தன் வீட்டை திரும்பித் திரும்பிப் பார்த்து 😭😭கதறிக் கொண்டே யம லோகத்தை அடைவான்.
“பிண்ட சரீரம் பெற்ற உயிர், யம கிங்கரர்களால் பாகத்தால் பிணைத்துக் கட்டப்பட்ட நிலையில் நாள் ஒன்றுக்கு இருநூற்று நாற்பத்தேழு காத வழி இரவுபகலுமாக நடந்து செல்ல வேண்டும்.
அவன் போகும் வழியில் கல், முள், அடர்ந்த காடுகளைக் கண்டு பிண்ட ஜீவன் பசியாலும், தாகத்தாலும் வருந்தித் தவிப்பான்.
🌸🌸🌸🌸🌸🌸
👉விகாரமான மூவகைத் தூதர்களை ஏவியனுப்புவான்.
👉 வாழ்நாள் முடிந்த ஜீவனைப் பாசத்தால் கட்டிப் பிடித்து காற்றின் உருவமான தேகத்தில் அடைத்து யமலோகத்திற்குச் செல்வார்கள்
👉. ஆவி உருவ உயிர்களை யமபுரித் தலைவன் கால தேவன் முன்னால் நிறுத்துவார்கள்.
👉“அவர் அத்தூதர்களை நோக்கி, “ஏ கிங்கரர்களே! இந்த ஜீவனை மீண்டும் கொண்டு போய் அவன் வீட்டிலேயே விட்டுவிட்டு பன்னிரெண்டாம் நாள் கழிந்த பிறகு முறைப்படி மீண்டும் நம் சபை முன்பு
👉நிறுத்துங்கள்.”
என்று கட்டளையிடுவான்.
🌸🌸🌸🌸. சிரத்தையுடன் செய்யவேண்டிய காரியம்.
இறந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியமே சிராத்தம்.
சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், ஜலம், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும்.
தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய கோத்திர தாயாதிகளுக்கு ஒவ்வொருவரும் செய்யவேண்டிய மிக முக்கிய கடமையாகும் இது.
இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்!
🌸🌸🌸🌸🌸
ஜீவன் செல்லும் பாதையில் பரிதவித்தல்
👉“யமதூதர்களால் பாசக் கையிற்றால் கட்டுண்டும், அவர்களிடம் உதையுண்டும் செல்லும் ஜீவன் தன் மனைவி மக்களோடு வாழ்ந்த காலத்தில் அடைந்திருந்த இன்பத்தை நினைத்து,  
👉துன்பமடைந்து பசியாலும் தாகத்தாலும் மெலிந்து சோர்வுற்று இளைத்து, ஈன ஸ்வரத்தோடு ‘ஐயகோ!
👉நம்மோடு வாழ்ந்த உற்றார் உறவினர் எங்கே? இந்த யம படர்களிடம் சித்ரவதைப்படும்படி விட்டு விட்டார்களே!
👉நான் சேர்த்த பொருள்கள் எங்கே? ஊரையடித்து உலையில் போட்டோமே, உழைத்தவன் உழைப்பை உறிஞ்சி நயமாக வஞ்சித்து வாழ்ந்தோமே!’
😭என்று அலறித் துடிப்பான்.
“கருடா! தீய தொழில் புரிந்தோர் அடையும் கதியைப் பார்.
👉பிறகு அந்த சேதனன் சிறிது தூரம் அனாதையாக காற்றின் வழியிலும்,
👉புலிகள் நிறைந்த வழியிலும் இழுத்துச் சென்று ஓரிடத்தில் தங்கி,
👉இறந்த இருபத்தெட்டாம் நாளில் பூமியில் புதல்வனால் செய்யப்படும் ஊனமாகிய சிரார்த்த பிண்டத்தைப் புசித்து,
👉முப்பதாம் நாளன்று யாமியம் என்று நகரத்தைச் சேர்வான்.
👉“அங்கு பிரேதக் கூட்டங்கள் கூட்டம் கூட்டமாக கூடியிருக்கும்.
👉 புண்ணிய பத்திரை என்ற நதியும் வடவிருட்சமும் அங்கு உள்ளன.
👉 பிறகு அவ்யாமியம் என்ற நகரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து,
👉இரண்டாவது மாசிக பிண்டத்தை அருந்தி, இரவும் பகலும் தூதர்களால் இழுத்துச் செல்லப்பட்டு யாருக்கும் பயத்தை ஏற்படுத்தும் ஆரண்யத்தின் ஊடே சென்று வழிநடக்கும் வேதனையோடு ஓவென்று அழுது தூதர்கள் செய்யும் கொடுமையால் வருத்தித் துன்புறச் செல்லும் வழியில் திரைபக்ஷிக மாசிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற அரசனுக்குரிய சௌரி என்ற நகரத்தைச் சார்ந்து அங்கு மூன்றாம் மாசிக பிண்டத்தை புசித்து அப்பால் சென்று,
👉 வழியிலே பொறுக்க முடியாத குளிரினால் மிகவும் வருந்துவான்.
👉“பிறகு குருரபுரம் என்ற பட்டணத்தை அடைந்து அங்கு ஐந்தாவது மாசிக பிண்டத்தையுண்டு,
👉அப்பால் நடந்து கிரௌஞ்சம் என்ற ஊரையடைந்து,
👉அந்த ஊரில் ஆறாவது மாசிக பிண்டத்தை உண்டு,
👉அங்கு வாழ்ந்ததை நினைத்து வாய்விட்டு புலம்புவான்.😭
🌸🌸🌸🌸🌸
🌺🌺நாயகன் வரவுதனை
🌺🌺நாடி தேடித் தினம்
🌺🌺நயனங்கள் வேர்க்கின்ற
🌺🌺நங்கையர் போல்
🌺🌺நாளும் பொழுதும்
🌺🌺நர்த்தனம் புரியு மவன்
🌺🌺நளினங்கள் நினைந் துருகி
🌺🌺நாட்கள் கரைந்திட

🌺🌺நாளும் காக்கும் நரன்
🌺🌺நாமம் உரைத்து அன்று
🌺🌺நரற்றிய அவன் குழலிசையில்
🌺🌺நனைந்து நினைந்து மயங்கிட
🌺🌺நாடி நரம்புகள் புடைத்து
🌺🌺நடுங்கி தவித்திட
🌺🌺நானும் தேடி தேய்கின்றேன்
🌺🌺நந்தன் மகனை
கிருஷ்ணா நீ எங்கே
உனை தேடி தேடி
உயிரே உருகிடும்
போது நீ
உயிரினுள் எங்கே
ஒளிந்து கொண்டாய்
கிருஷ்ணா
🌸🌸🌸🌸🌸
#கருடர்:-
(மரணபயத்தை போக்கிட)

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பஷாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்

ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
ஸ்வர்ண பஷாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்
ஓம் தக்ஷபத்ராய வித்மஹே
தனாயுபுத்ராய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்.
கருட புராணம்
வாழ்க வளமுடன்.

பப்ருவாகனன் வரலாறு


மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும்
மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும்.
☝இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல!
☝எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.
☝மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது.
☝இந்த மாற்றம் உலக நியதி எனது படைப்பின் சாராம்சமும் ஆகும்.
☝☝☝☝☝☝☝☝

#பிரேத ஜன்மம் அடைந்த ஒருவர் வரலாற்றினை பகவான் கருடனுக்குக் கூறினார். திரேதாயுகத்தில் பப்ரு வாகனன் என்று ஓர் அரசன் இருந்தான். அவன் அஹோதயம் என்ற நகரத்திலிருந்து நீதி, தர்மம், நியமம் தவறாமல் உலகை ஆண்டு வந்தான். அவன் தன் படை வீரர்களுடன் வேட்டையாடச் சென்றான். அவன் பார்வையில் ஒரு புள்ளி மான் காணப்பட்டது. அதன் மீது இரண்டு, மூன்று தரம் அம்பெய்தினான். அதனால், அதன் உடலில் காயம் ஏற்பட்டும் அது தப்பி ஓடிவிட்டது. அதைத் தொடர்ந்து, பலவிடங்களில் தேடிச் சென்ற அரசன் தனியனாகி, சோர்ந்து ஒரு தாமரைப் பொய்கையைக் கண்டு நீராடித், தண்புனல் பருகிக் களைப்பு நீங்கினான். குளக்கரையிலிருந்த ஆலமரத்தின் அடியில் பரிஜனங்களின் வருகைக்காகக் காத்திருந்தான். அந்தி மங்கி இருட்டிவிட்டது.

அப்போது பிரேதம், பல பிரேதங்களோடு இங்குமங்கும் ஓடி, பசி தாகத்தோடு வருந்துவதையும் கண்டான். அதைக் கண்ட அரசன் அச்சமும், அதிர்ச்சியும், வியப்பும் கொண்டான். அப்போது அந்த பிரேத ஜன்மம் அரசனிடம் வந்து அரசே, உன்னை நான் காணப்பெற்றதால் இந்தப் பிரேத ஜன்மம் நீங்கி நற்கதி அடைவேன் என்று நம்புகிறேன் எனக் கூறியது. அப்போது பப்ருவாகன மன்னன் அந்தப் பிரேத ஜன்மத்தைப் பார்த்து அதன் வரலாறு பற்றிக் கேட்க, அது கீழ்க்கண்டவாறு கூறிற்று:

நான் வைதிக நகரில் வைசிய குலத்தில் பிறந்தேன். என் பெயர் தேவன். நான் திருமணம் செய்து கொண்டு சுகமாய் வாழ்ந்து வந்தேன். வாழ்நாள் முழுவதும் தேவாராதனை, விரத அனுஷ்டானம், பிராம்மண வழிபாடு, தேவாலய கைங்கரியம், அனாதைகள் ரக்ஷணை போன்ற நன்மைகளையே செய்து வந்தேன்... எனக்கொரு புத்திரனோ, உறவினரோ இல்லை. யாருமே கர்மம் செய்யவில்லை. எனவே இந்தப் பிரேத ஜன்மத்துடன் நான் மரித்த நாளிலிருந்து நெடுங்காலமாக வருந்துகிறேன். அரசே, நீ குடிமக்களின் காவலன், உறவினன். மரித்து பிரேத ஜன்மத்துடன் இருக்கும் எனக்கு நீயே எல்லாக் கர்மங்களையும் செய்யவேண்டும். என்னிடம் உள்ள இந்தச் சிறந்த மாணிக்கத்தை உனக்குக் காணிக்கையாக அளிக்கிறேன் என்று கூறி மாணிக்கத்தைக் கொடுத்தது. அப்போது கர்ம காரியங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்று கேட்டான் மன்னன். பிரேதம் சொல்லியது, நாராயண பலி சகிதனாய், ஸ்ரீமந்நாராயணன் மங்கள விக்கிரகம் ஒன்று செய்து, சங்கு, சக்கர, பீதாம்பரங்களைக் கொண்டு அலங்கரித்து, கீழ்த்திசையில் ஸ்ரீதரனையும், தெற்கில் மகாசூரனையும், மேற்கில் வாமனனையும், வடக்கில் கதாதரனையும் நடுவில் அயன், அரனுடன் ஸ்ரீ விஷ்ணுவையும் நிலை நிறுத்தி ஆராதனை செய்து, வலம் வந்து வணங்கி, அக்கினியில் ஹோமம் செய்து, மீண்டும் நீராடி விரு÷ஷார் சர்க்கம் செய்து பதின்மூன்று பிராமணர்களுக்கு குடை, மாரடி, மோதிரம், பலகை, வஸ்திரம், பொன் முதலியவற்றை வழங்கி பிருஷ்டான்ன போஜனம் செய்வித்துச் சய்யாதானம், கடகதானம் ஆகியவை கொடுத்தால் பிரேத ஜன்மத்திலிருந்து விடுபட முடியும் என்றது.

அவ்வமயம் அவனது பரிவாரங்கள், அங்கு வர அது மறைந்துவிட்டது. அரசன் தன் நகரமடைந்து பிரேத ஜன்மத்தைக் குறித்து அதற்குரிய கர்மங்களையும், தர்மங்களையும் முறைப்படிச் செய்து முடிக்க, அந்தப் பிரேத ஜன்மம். ஆவிப்பிறவி நீங்கி நல்லுலகை அடைந்தது. பிரேத ஜன்மம் நீங்க வேறென்னென்ன செய்யலாம் என்பதைப் பகவான் கருடனுக்கு விளக்கினார். எண்ணெய் நிறைந்த குடத்தைப் பெரியோர்களுக்குத் தானம் கொடுத்தால் சகல பாபங்களும் நீங்கி பிரேத ஜன்மம் தொலையும், அவன் இன்பமுடன் மீளாவுலகை அடைவான். பொன்னாலான குடங்களில் பாலும், நெய்யும் நிரப்பி திக்குபாலகரையும், அஜ சங்கரரையும், ஸ்ரீ ஹரியையும் ஆராதனை செய்து அக்குடங்களைப் பிராமண உத்தமர்களுக்குத் தானம் கொடுப்பது மிக்க சிறப்புடையதாகும்.

தொடரும்...

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!
🌸🌸🌸🌸🌸🌸
ரௌரவ நரகம்:
பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.
👉அங்கு வெப்பத்தால் கொதிக்கும் கொதிநீர்தான் காணப்படும்.
👉குடிக்க ஒரு துளித் தண்ணீர் கூடக் கிடைக்காது.
அருந்துவதற்கு அருகதையற்ற ரத்தம் பொழிவதாக இருக்கும். ‘
நான் உயிரோடிருந்த போது எத்தனை பாவங்கள் செய்தேன்.
ஞானிகளையும், பாகவத சந்நியாசிகளையும் ஏசிப் பேசிப் பரிகாசம் செய்தேன்.
 👉அவற்றையெல்லாம் இப்போது அனுபவிக்கின்றேன்.
👉மலை போன்ற ஆயுதத்தால் யமகிங்கரர்கள் இரக்கமில்லாமலே என்னை அடித்துப் புடைக்கிறார்களே! அந்தோ! உடலுமில்லாமல் ஆவியாய் அவதியால் அலறித் தவிக்கிறேன்.’
👉ஜீவனின் ஒவ்வொரு குரலுக்கும் தூதர்கள் அவனைத் துன்புறுத்த, அவன் அவர்களால் யமபுரிக்கு இழுத்துச் செல்லப்படுவான்!” என்று திருமால் கூறியருளியாதகச் சூதபுராணிகர் கூறினார்.🙏🙏🙏
🌸🌸🌸🌸

👉வேத வடிவனாகிய கருடன், சர்வலோக நாதரான ஸ்ரீமந் நாராயணனை வணங்கி,🙏 “ஹே பரமாத்மா!  🙏

👉ஒருவன் மனத்தூய்மையோடு தானதர்மங்களைத் தன் கையாலே செய்வானாயின், அதனால் அவன் அடையும் பயன் என்ன?
👉அவனுக்காக அவனுடைய மகன் முதலியோர் தான தர்மம் செய்பவர்களானால் அதனால் உண்டாகும் பயன் என்ன?

👉இவற்றைத் திருவாய் மலர்ந்தருள வேண்டுகிறேன்!” என்று விண்ணபஞ் செய்ய பாம்பணையில் துயிலும் பரமாத்மா கூறலானார்.

👉“கருடனே! மனத்தூய்மை இல்லாமலும், மனவுறுதி இல்லாமலும் செய்யப்படும் நூறு கோதானங்களுக்கு எத்தனைப் பயன் உண்டோ?

👉“ அதனை சித்த சுத்தத்தோடு சாஸ்திரங்களில் விதித்த வண்ணம் ஒரு பசுவை நல்லவருக்கு தானம் செய்தால், அதன் பயனும் கிடைக்கும்.

👉கோதானம் கொடுப்பவரும், வாங்குபவரும் மனத்தூய்மை உள்ளவராகயிருக்க வேண்டும்.

👉வாங்குபவர் உத்தமராக இருக்க வேண்டும்.

👉கற்றுணர்ந்த சான்றோருக்குக் கொடுக்கப்படும் தானம், தானம் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் புண்ணியமுன்டாகும்.

👉“வேத சாஸ்திரங்களை ஓதாமலும், ஒழுக்க வழியில் நில்லாமலும், பிராமணன் என்ற பெயரை மட்டும் கொண்டவனுக்கு தானம் கொடுத்தால், அந்த தானமே தானங் கொடுத்தவனுக்கு நரகத்தைக் கொடுக்கும்.

👉 மேலும் தானம் வாங்குவதற்கே தகுதியில்லாதவன் தானம் வாங்குவானாயின் அவன் இருபத்தோரு தலைமுறை உள்ளவர்களோடு நரகம் புகுவான்.
                                                          
👉“ஒரு பசுவை, ஒருவருக்கு மட்டுமே தானம் கொடுக்க வேண்டும்.

👉சாதுக்களிடம் நல்லப் பொருள்களைப் பக்தி சிரத்தையோடு தானம் கொடுத்தவன், அந்தப் பிறவியிலாவது, மறுபிறவியிலாவது அதற்குரிய நற்பயனைச் சந்தேகமின்றி அடைவான்.

👉“தானம் கொடுப்பவன் எளியவனாக இருந்தால் ஏதாவது ஒருபொருளைக் கொடுத்தாலும் போதுமானது.

👉கருடா! மரித்த பிறகு செய்ய வேண்டிய கிரியைப் பற்றி உனக்கு ஒருவாறு கூறினேன்.”

👉என்று ஸ்ரீமந் நாராயணர்
கூறியருளினார்.🙏🙏🙏🙏🙏🙏
👉நவீன விஞ்ஞானம் கூட தடுமாறக்கூடிய உடலைப் பற்றிய விளக்கங்களை, கருடபுராணம் துல்லியமாய் நம் கண் முன் வைக்கிறது.

👉உடம்பில் மூன்று கோடியே ஐம்பது இலட்சம் உரோமங்கள், தலையில் எழுபது இலட்சம் உரோமங்கள், இருபது நகங்கள், முப்பத்திரண்டு பற்கள் உள்ளதாகவும், மனிதனின் உடம்பில் உள்ள மொத்த தசையின் எடை ஆயிரம் பலம், இரத்தம் நூறு பலம், கொழுப்பு பத்து பலம், தோலின் எடை ஏழு பலம், மஜ்ஜையின் எடை பன்னிரெண்டு பலம், மிகவும் உயர்ந்த இரத்தம் மூன்று பலமும் உள்ளதாக கூறுகிறது.

👉நவீன வசதிகள் இல்லாத காலத்தில் கூறப்பட்டுள்ள இந்த புள்ளி விபரங்களை, நவீன மருத்துவம் முழுமையாக கூற முடியாமல் இன்றும் எல்லாவற்றிக்கும் ஒரு சராசரியான அளவைத் தான் கூறி வருகிறது.

👉(ஒரு தோலா- பத்து கிராம் (வடஇந்திய நகை கடைகளில் இந்த தோலா அளவு இன்றும் சொல்லப்படுகிறது), மூன்று தோலா = ஒரு பலம், ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம், அதாவது ஒரு பலம் என்பது 6/5 அவுன்ஸ்)
☝சரி. இப்போது கருடபுராணம் என்றால் என்ன?
☝அதை யாரால், யாருக்கு சொல்லப்பட்டது? என்பதை பார்ப்போம்.

☝பதினெட்டு புராணங்களில் ஒன்று கருடபுராணம்.
☝எழுதியவர் வியாசர்.
☝இது இந்து சமய புராணங்களில் ஒன்றாகும்.
☝பெயரைப் பார்த்ததும், விஷ்ணுவின் வாகனமான கருடனைப் பற்றிய வரலாறு இதில் இருக்கிறதோ என்று எண்ணி விட வேண்டாம்.

☝அப்படியானால், கருடபுராணம் என்று பெயர் வைப்பானேன்!  இந்த விஷயத்தை ஸ்ரீமன் நாராயணன், கருடனுக்கு முதலில் உபதேசம் செய்தார். கருடன் கேட்ட புராணம் என்பதால், அது கருட புராணமாயிற்று.

☝வைணவ புராணமான இதில் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, வாழ்வுக்குப் பின் உயிர்கள் எங்கே போகின்றன? சொர்க்கம் நரகம் உண்டா? அங்கே என்னென்ன சுகதுக்கத்தை உயிர் அனுபவிக்கிறது, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி விளக்குகிறது. இப்புராணத்தில் வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தின கட்டமைப்பு மற்றும் பண்புகள் பற்றி விவாதிக்கிறது. மொத்தம் பத்தொன்பது ஆயிரம் செய்யுட்கள் கொண்ட இப்புராணம், பூர்வ கந்த மற்றும் உத்திர கந்த என்ற இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.🙏
🌸🌸🌸🌸🌸🌸
எட்ட நின்று ரசிப்பதா
கிட்ட நின்று ரசிப்பதா

எத்தனை அழகு நீ
அத்தனை அழகையும்

அன்பரே தம்
அருகிருந்து ரசித்திடாது

முத்ததை பிரிந்திடும்
ஆழ்கடல் சிப்பி போல்

மாயையெனும் பெருங்கடலில்
அமிழ்ந்து கொண்டேனே கண்ணா

கோடி மானிடரே வந்து போய் விடினும்
நூறு வடிவமே நீ எடுத்து வரினும்

மங்கை மானம் காத்து
மாதர் அறம் போற்றி

நன்றே செய்து தர்மத்தை
நலமே வாழ வைத்த

கண்ணா உனக்கீடாகுமோ

காதருகே ஞானம் தரும்
உன் நாமத்திற் கிணையாகுமோ

 மாதவா வேறொரு உருவமே
நீ எடுத்து வரினும்

கண்ணா உனையன்றி
வேறு வடிவமும்

நான் கண்டிட விரும்பேன்
உனை  சுற்றி வரும் எனை

மாயை கடலிருந்து
கரையேற்றிட வருவாயோ வாராயோ

காத்திருக்கின்றேன் கண்ணா
கவி துளிகளில் கண்ணீர் வடித்த படி🙏🙏🙏

சபிண்டீகரணம்


உலக வாழ்வை விட்டு, உடலையும் விட்டு மாண்டவனுக்கு வருஷம் முடியும் வரை சகலமும் சாஸ்திரப்படிச் செய்து, சபிண்டீகரணமும் செய்து அவன் குலத்தில் முன்னமே மாண்டவருடைய பிண்டத்தோடு இறந்தவனுக்குரிய பிண்டத்தையும் சேர்த்தல் வேண்டும். அவ்வாறு செய்தால் இறந்தவன் பிரேதத்துவம் நீங்கி பிதுர்த் தேவர்களோடு சேர்ந்து கொள்வான். இறந்த பன்னிரண்டாம் நாள், மூன்றாவது பக்ஷம், ஆறாவது மாதத்திலும் சபிண்டீகரணம் செய்யலாம். சபிண்டீ கரணம் செய்யும் வரையிலும் மரித்தவன் பிரேத தத்துவத்துடனேயே இருப்பான். புத்திரன் இல்லாவிட்டால் இறந்தவனுடைய கனிஷ்டனாயினும், ஜேஷ்டனாயினும், அவர்களில் ஒருவனுடைய புத்திரனாயினும் கர்மம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தாயாதி செய்யலாம்.

ஒருவரும் இல்லாவிட்டால் புரோகிதனே இறந்தவனுக்குரிய கர்மங்களைச் செய்யலாம்.
ஓராண்டு வரையிலும் ஒருவனே கர்மம் செய்ய வேண்டும். நித்திய சிரார்த்தத்தோடு ஒரு குடத்தில் ஜலம் நிரப்பி உதக கும்பதானம் செய்ய வேண்டும். கர்மங்களைத் தவறாமல் செய்தால் இறந்தவன் விமானம் ஏறி நல்லுலகடைவான். கணவன் நல்லவனாயினும், தீயவனாயினும், அறிஞனாயினும், அறிவிலி ஆயினும், உயிரோடிருக்கும் போதும் இறந்த பிறகும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று பக்தி செய்து கற்பொழுக்கத்தில் நிலை நிற்பவளே உத்தமியாகும். தெய்வ வழிபாடு, அதிதி ஆராதனை, விரத, அனுஷ்டானங்கள் முதலியவற்றை கணவன் செய்வானாகில், அவன் மனைவியும் அவனுக்கு அனு கூலமாக யாவையும் செய்ய வேண்டும். அத்தகைய கற்புக்கரசி இறந்த பிறகு உயர் குலத்தில் பிறந்து உத்தமனான ஒருவனைத் தனது கணவனாக அடைந்து, நன்மக்களும் பெற்று குலவிருத்தி செய்து தந்தைக்கும், கணவனுக்கும் புகழை உண்டாக்கி, சுமங்கலியாகவே மரித்து உத்தம லோகத்தை அடைவாள்.

தொடரும்...

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!
🌸🌸🌸🌸🌸🌸
#கருடபுராணம்//
#தண்டனைகள்
===≠===========
 #அந்தகூபம்:
------–---------------
 உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.
வைவஸ்வத பட்டணம் என்ற பட்டணமுண்டு. அங்கு அச்சம் தரும் மிகவும் கோரமான பிராணிகளுக்கு இருப்பிடமாகவும்,  துக்கத்தையே கொடுப்பதாகவும் அமைந்திருக்கும். பாபம் செய்தவர்கள் மிகப் பலர் எப்போதும் ‘ஆ, ஆ, ஊ, ஊ...’ என்று ஓலமிடுவார்கள்.

🌸🌸🌸🌸

அப்போது அவன் அருகே இருக்கும் தூதர்கள் அவனைப் பார்த்து' முழு மூடனே! பூமியில் மனிதனாகப் பிறக்கும் வாய்ப்பைப் பெற்று, மானிட ஜென்மம் கிடைப்பது அரிது.

“அவன் இம்மைக்கும் மறுமைக்கும் தருமங்களையும் ஏராளமாகத் தான் வாழ்கின்ற காலமெல்லாம் செய்து புண்ணியங்களை சேர்த்திருக்கலாமே, அதை விட்டு மறுமைக்கு பயன் தராத பொருளைச் சேர்ப்பதிலேயே காலங்கழித்த மானிடனை என்னவென்று சொல்வது? பூமியில் வாழ்கின்ற காலத்திலேயே சேர்க்கிற நல்வினைத் தீவினைப் பயன்களை அடையாமல் உடலை இழந்து ஆவியான பின்பு எதையுமே செய்ய இயலாது.

“மண்ணுலகத்திலே ஆடம்பரமாக, அகம்பாவமாக, ஆனந்தமாகப் பெரியோரை மதிக்காமல் செல்வதும், உழைப்பாளியை உதைக்கச் செய்வதும் மனிதர்கள் செய்யும் புண்ணிய பாவங்களின் பயனேயாகும் என்பதை அறிவாயாக. இறந்தபின் நினைத்து என்ன பயன்?.

“கருடனே! உதக கும்பதானம் என்ற ஒருவகைத் தானமாக செய்யப்பட்டதாயின் ஜீவன், அந்த உதக கும்பத்திலுள்ள நீரைப் பருகியாவது சிறிதளவாவது தாகவிடாய் தீர்ந்து ஏழாம் மாதத்தில் அவ்விடத்தை விட்டு மீண்டும் நடந்து செல்வான்.

“இதுவரை பாதி தொலைவைக் கடந்தவனாய் அம்மாதத்தில் அவனுக்குரியவர் பூவுலகில் அன்னதானம் செய்ய வேண்டும். பிறகு அந்த ஜீவன் “பக்குவபதம்” என்ற பட்டினத்தைச் சார்ந்து எட்டாவது மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து நடந்து ‘துக்கதம்’ ஊரை அடைந்து உண்பான்.

“விருஷோற்சனம் செய்யாமையால் அநேகம் ஜீவர்கள் பிரேத ஜென்மத்தோடு அப்பட்டணத்தில் கூட்டம், கூட்டமாக கூடி, ஒ ஒ வென்று ஓயாமல் ஓலமிட்டுக் கதறிக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு கதறும் அச்சீவர்களை பாது அங்குவந்த ஜீவனும் கத்தி கதறிவிட்டு, அப்பால் நடந்து "அதத்தம்" என்ற ஊரையடைந்து பதினொன்றாம் மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து "சீதாப்ரம்" என்ற நரகத்தை அடைந்து அங்கு சீதத்தால் வருந்தி, பன்னிரெண்டாவது மாதத்து வருஷாப்தியப் பிண்டத்தை உண்டு, அங்கிருந்து புறப்பட்டு நான்கு திசைகளையும் பார்த்து ஈனக் குரலில், ‘யமகிங்கர்களே! என் உற்றார் உறவினர்களை காணோமே! ஏழையேன் என் செய்வேன்...’ என்று அழுவான்.

“அப்போது எமதூதர்கள் அந்த சீவனை நோக்கி, ‘முழுமூடனே! உன் மனைவி மக்கள் இன்னமுமாயிருப்பார்கள்? அவர்கள் மேல் உனக்குள்ள ஆசைகள் இன்னும் நீங்கவில்லையா? நீ செய்த புண்ணிய பாவங்களின் பயன்களைத்தான் இங்கு நீ காண முடியும்’ என்று அறைவார்கள். ‘ஐயோ! முன்னமே நீங்கள் சொன்னது மறந்து ஏதேதோ பிதற்றுகிறேன்...’ என்று தனக்குள் தானே மனம் புழுங்கி நடந்து வைவஸ்வத பட்டினம் என்ற நகரத்தைச் சேர்வதற்கு முன்பே ஊனற்பதிக பிண்டத்தை அருந்தி யமபுரி பட்டினமாகிய வைவஸ்வத பட்டினத்தை அடைவான்.

“யமபுரி நூற்றி நாற்பத்து நான்கு காதவழி அகலமுள்ளதால் காந்தர்வ அப்சரசுகளோடு கூடியதாய் என்பது நான்காயிரம் பிராணிகள் வாழுமிடமாகயிருக்கும் ஜீவன்கள் செய்யும் பாப புண்ணியங்கள் அறிந்து, எமதர்மனுக்குத் தெரிவிக்கும் பன்னிரண்டு சிரவணர்கள் என்பவர்கள் அந்த நகரில் இருப்பார்கள். ஜீவர்கள் அனைவரும் அந்தப் பன்னிரு சிரவணர்களையும் ஆராதனை செய்து ஆராதித்தால், ஜீவன் செய்த பாபங்களை யெல்லாம் மறைத்து புண்ணியங்களை மட்டும் சிரவணர்கள் யமதர்மராஜனுக்கு எடுத்துரைப்பார்கள் என்று திருமால் கூறியருளினார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

ஆசையின்றி வாழ்வதே வாழ்வாகும்
மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.
🙏
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய புராணம் இது என்பது மட்டும் நிஜம்.
🙏தவறுகள் குறைய இந்த கருடபுராணம் வழிவகுக்கும்.
🙏மொத்தத்தில் அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும் என்பதை உணர்த்தும் நூல் கருடபுராணம்.

🙏உலகில் உயிரினங்களுக்கு பிறப்பும் இறப்பும் எந்தக் காரணத்தால் உண்டாகின்றன? எந்த காரணத்தால் தீராத நோய்கள் வருகின்றன?

🙏எதனால் முக்தி மோட்சம் கிடைக்கும்? ஜெனனம் எடுத்து பூமியிலே வாழ்ந்து வளர்ந்து அனுபவமடைந்து மரணம் அடைந்த பிறகு எந்தச் செய்கையால் சொர்க்கமும், நரகமும் அடைய நேரிடுகிறதென கூறப்படுகிறது?
🙏என்று நைமிசாரணியவாசிகள் கேட்டதற்கு சூதமா முனிவர் கூறிய புராணம் இது. வாழ்விற்கு அப்பால் ஜீவன் செல்லும் வழி வகைகளை விளக்கும் நூல்.

புத்திரர்கள் பௌத்திரர்கள் கர்மம்



குழந்தை பிறந்த ஆறு மாதங்கள் வரை சிசு, மூன்று வயது வரையில் பாலகன், ஆறு வயது வரையில் குமரன், ஒன்பது வயது வரையில் பவுண்டகன் எனப்படும். பதினாறு வயது வரையில் கைசோரன் எனப்படுவான். மரித்தவன் பாலகனாயினும், இளைஞனாயினும், விருத்தனாயினும் உதக கும்ப தானத்தை அவசியம் செய்ய வேண்டும். மூன்று வயதுக்குள் இறக்கும் குழந்தையைப் புதைக்க வேண்டும். 24 ஆவது மாதம் முடிந்து 25ஆவது மாதம் பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளை எரிக்கவேண்டும். ஐந்து வயது முடிந்து பூணூல் அணிந்திருந்தாலும், இல்லா விட்டாலும் இறந்தவனுக்குப் பத்து நாட்களுக்கும் பிண்டம் போட வேண்டும். 5 முதல் 12, (அ) 12 நிரம்பியவர் மரித்தால் விருக்ஷாற்சனம் செய்ய வேண்டும். ஆனால், சபிண்டீகரணம் செய்யலாகாது.

புத்திரனுக்குத் தந்தையும், தந்தைக்குப் புத்திரனும் கர்மம் செய்ய வேண்டும். பூணூலை இடது பக்கம் தரித்துக் கொண்டு தருப்பையுடன் ஏகோதிஷ்டம் போன்ற சிரார்த்தங்களைச் செய்தால் மரித்தவன் மறு ஜன்மத்தில் நல்ல குலத்தில் பிறந்து தீர்க்காயுளுடன் வாழ்வான். நல்ல புத்திரனையும் பெறுவான். பெரும்பாலான பிள்ளைகள் தந்தையைப் போன்ற உருவமும் அறிவும் ஒழுக்கமும் உடையவர்களாக விளங்குகின்றனர். தந்தைக்கு அமைந்துள்ள சிறப்பான அமிசங்களில் ஏதேனும் ஒன்று தனயனுக்கும் பொருந்தும். ஒருவன் தனக்குத் தனது இல்லாள் வயிற்றில் பிறந்த பிள்ளையின் முகத்தைக் கண்ணால் பார்த்துவிட்டால் அந்த ஜன்மத்தில் புத் என்னும் நரகத்தை ஆன்மாவில் காணமாட்டான். மணம் புரிந்துகொண்ட ஒருவன் ஒருத்திக்கே புத்திரன் பிறந்தால் அவன் குலத்தில் பிதிர்த் தேவர்கள் எல்லாம் மிக்க மகிழ்ச்சி அடைவர்.

தந்தைக்கு ஈமக்கடன்களைத் தலைச்சனே அதாவது முதல் மகனே செய்யக் கடமைப்பட்டவன் ஆவான். மற்ற புத்திரர்கள் இருந்தால் அவர்கள் தகப்பனுக்கு சிவகர்மங்களையும், சிரார்த்தாதிகளைச் செய்யக் கடவராவர். ஒருவன் தனக்குப் பௌத்திரன் பிறந்து அவனை எடுத்துப் பார்த்த பிறகே மரித்தால் நல்லுலகை அடைவான். கொள்ளுப் பேரனைப் பார்த்தவன் அதைவிட நல்லுலகை அடைவான். பெண்ணுக்கு விலை கொடாமல் கன்னிகாதானம் செய்து கொடுக்க அவளை மணம் புரிந்து, புத்திரனைப் பெற்றால், அந்தப் புத்திரன், காமக் கிழத்தியின் மகன் ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்யலாம், தானங்கள் செய்யலாம்.
சற்புத்திரர்கள் தீர்த்தயாத்திரைச் செய்யலாம். அன்னரூபமாயும், ஆமரூபமாயும், ஹிரண்ய ரூபமாயும் சிரார்த்தம் செய்யலாம்.

தொடரும்...

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!
"""உன் பின்னால் நிற்கும் எல்லோருக்கும் உன்னை பிடிக்கும். என்று நினைக்காதே அதில் எத்தனை பேர் உன் முதுகில் குத்த போகிறார்கள் என்பது உனக்கு தெரியாது.....எப்போதும் விழிப்புடன் இரு.....
🌸🌸🌸🌸🌸
கருட புராணம் || தண்டனைகள்
----------------------------------------
தாமிஸிர நரகம்
---------------------------
பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புதல் அல்லது அபகரித்தல், பிறரது குழந்தையை அபகரித்தல், பிறரது பொருளை ஏமாற்றி அபகரித்தல்.
*
நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் அடிப்பார்கள்.
**********
🌸🌸🌸🌸🌸🌸
 #ஞானகர்மஸந்யாஸயோகம்
🙏 16. " கர்மம் எது  கதர்மம் எது என்பதில் ஞானிகளே தடுமாற்றம் அடைகின்றனர். எதை கர்மம் என்று அறிந்து கேட்டில் இருந்து விடுபடுவாயோ அதை உனக்குக் கூறுவேன்". 🙏

விளக்கம்:  துயரங்களில் எல்லாம் மிகப் பெரியது பிறவிப் பிணி என்பதே.  தீராத இந்தப்  பிறவி  என்னும்  பெருங்கடலைக் கடக்க  இறைவனின்  அருள் வேண்டும்.   தீராத   இத்தொல்லையைத் தொலைப்பதற்கு   வினையின் கூறுகள்  முழுவதும் விடு பட வேண்டும்.  செயலில் ஒரு உடலைக் கொண்டு ஓயாது வேலை வாங்குவது  தானே. கர்மம் ம் என்று நினைக்க வேண்டாம்.  எதைச் செய்வது நல்லது   என்று  சாஸ்திரங்கள் கூறுகிறதோ  அதுவே கர்மம்.(வினைகள்)

🙏17. " கர்மத்தின் போக்கைத்  தெரியவேண்டும்.  விலக்கப்பட்ட கர்மம் எது என்று தெரியவேண்டும்.  கர்மத்தை கடந்த நிலையையும் தெரியவேண்டும்.  கர்மத்தின் போக்கு அறிதற்கரியது". 🙏

 விளக்கம்:  இதைச் செய்!  இதைச் செய்யாதே!   என்று சாஸ்திரம் விதித்துள்ளது.  இதில்  இதை செய்!  என்று சாஸ்திரம்  எதைக் கூறுகிறதோ,  அதுவே  கர்மம் எனப்படுவது.  இதைச் செய்யாதே!  என்று எதை சாஸ்திரம் விலக்கி இருக்கிறதோ, அதுவே  அகர்மம்(விலக்கப்பட்ட செயல்)
எதையெல்லாம்  செய்யக்கூடாது என்பதற்கான விளக்கங்கள் 16 17 ஆவது அத்தியாயங்களில் பகவானால் கூறப்படுகிறது.🙏
_
🌸🌸🌸🌸🌸🌸🌸
கர்மம் கைங்கர்யத்தில் புகும்.
ஜ்ஞானம் ஸ்வரூப ப்ரகாசத்திலே புகும்
பக்தி ப்ராப்ய ருசியிலே புகும்.
ப்ரபத்தி ஸ்வரூபயாதாத்ம்ய ஜ்ஞானத்திலே புகும்.

தன் வர்ணத்திற்கும்
தன் ஆச்ரமத்துக்கும் பொருந்தியதாக
ஒருவன் அநுஷ்டிக்கிற
(நித்ய நைமித்ய கர்மம்) விதிக்கப்பட்ட கர்மம்,
(ஸாதன புத்தியினால் அன்றிக்கே)
தற்செயல் சாதனம் என்ற
புத்தி இன்றிக்கே
பிறர் விஷயத்தில் கருணையாலே இவைகளை அனைவரும் ஒழுக
(பரார்த்தமாக) வேண்டுமென்று அநுஷ்டித்துக் காட்டுகையாலே எம்பெருமானுக்கு மிகவும் உகப்பாகையாலே
அவன் ப்ரீதியை முன்னிட்டு செய்யும் கைங்கர்யத்திலே சேர்ந்ததாகும்.

தன் ஸ்வரூபஜ்ஞான பூர்வமாக பரஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கைக்கு உறுப்பான
நுண்ணறிவு என்கிற ஸூக்ஷ்மஜ்ஞானம்
ஸாதனம் என்கிற புத்தி கழிந்ததும்,
ஸ்வரூப ப்ரகாசத்திலே
சேர்ந்ததாகும்.

பகவத் ப்ராப்திக்கு
(அதாவது வேறிடத்தில் இல்லாது எம்பெருமானிடமே கொண்டுள்ள பக்தியினாலே) அவனை அடைவதற்கு
ஸாதனமான பக்தியில்
அந்த ஸாதநபுத்தி கழிந்தவாறே போஜநத்துக்குப் பசிபோலே, ப்ராப்யமான கைங்கர்யத்துக்கு முன்வரக் கடவதான ருசியிலே உட்புகும்.

எம்பெருமானை உபாயமாகக் கொள்கைக்கு அடையாளமான ப்ரபத்தி,
ஏக பதத்தில் சொல்லுகிறபடியே
ஸாதனம் என்ற நினைவு கழிந்தவாறே
அத்யந்த பரதந்த்ரமான,
வேறு தஞ்சமற்றதாய் (அநந்ய சரணமாய்) இருந்துள்ள ஸ்வரூபத்தினுடைய
யதார்த்த ஜ்ஞானத்திலே ( உண்மை உணர்விலே) சேர்ந்ததாகும்.

கல்தாமரை

சித்தர்கள் உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் பல நாட்கள் இருப்பது போல நம்மாலும் இருக்க முடியுமா? அதற்கு என்ன வழி? என்று யோசித்து தேட ஆரம்பித்தேன்.  அப்போது தற்செயலாக ஒரு வயதான சித்த வைத்தியரை சந்தித்தேன்

நான் சந்தித்த அந்த வைத்தியர் முதியவராக இருந்தாலும் பல முற்போக்கான கருத்துக்களை கொண்டவராக இருந்தார். அவர் பசிதாகம் இல்லாமல் பல மணிநேரம் நம்மாலும் இருக்க முடியும் என்று கூறி ஒரு மூலிகை முறையை எனக்கு சொன்னார்.

குளத்து தாமரையை பற்றி கேள்விபட்டிருக்கிறோம். கல் தாமரை என்று ஒன்று இருக்கிறது என்ற சங்கதி நம்மில் பலருக்கும் தெரியாது. எனக்கும் கூட அப்போது நிலைமை அப்படிதான்.

அந்த கல்தாமரையை கொண்டு வந்து சுத்தமான தண்ணீரில் பனிரெண்டு மணிநேரம் ஊறவைத்து குடித்துவிட்டால் அடுத்த பனிரெண்டு மணிநேரத்திற்கு பசியே எடுக்காது. தாகம் வராது. உடலில் சோர்வு என்பதே தெரியாது என்று சொன்னார்.

அதே நேரம் ஒருமணிநேரம் ஊற வைத்தால் ஒருமணி நேரம் பசிக்காது. இரண்டுமணி நேரம் வைத்தால் அந்த மணிநேரம் வரை பசி எடுக்காது. நீ எவ்வளவு நேரம் ஊற வைக்கிறாயோ அவ்வளவு நேரம் அது வீரியத்தை காட்டும் என்றார்.

கல் தாமரை எங்கே கிடைக்கும் என்று அவரிடம் கேட்டேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் என்று சொன்னார்.

உடனேயே என் பரிசோதனையை ஆரம்பித்து விட்டேன். நாட்டுமருந்து கடையில் கல்தாமரையை வாங்கினேன். தாமரை என்றவுடன் அது பூவை போல இருக்கும். ஒருவேளை பதப்படுத்தி சருகு போல இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால்

இந்த கல்தாமரை காய்ந்து போன பாசிபோல் இருந்தது. அதை தண்ணீரில் போட்ட பத்தாவது நிமிடம் புத்தம் புதிதாக விரிந்து விட்டது. மலர்ச்சியாகவும் இருந்தது. பத்துமணி நேரம் ஊறவைத்து அதிகாலை நேரத்தில் குடித்து விட்டேன்.

உண்மையில் அன்றைய  பகல் முழுவதும் எனக்கு பசி இல்லை. அதே நேரம் சாப்பிடாமல் இருக்கிறோமே என்ற எண்ணமும் இல்லை. சோர்வும் இல்லை. தாகமும் இல்லை. உண்மையில் அசந்து போய்விட்டேன்...

தொடர்ந்து பலமணிநேரம்
தவம் செய்ய விருப்பம் உள்ளவர்கள்... இந்த கல்தாமரையை பயன்படுத்தலாம்....தொடர்ந்து தரத்தில் அமரும் பட்சத்தில் உடல் சூடாவதும் கால்கள் சூகை பிடிப்பதும் இயற்கை..

இந்த கல்தாமரையை பயனபடுத்தும் போது உடல் சூடாவதில்லை...கால்கள் சூகை பிடிப்பதில்லை...
தியானம் செய்ய அருமையான மூலிகை இந்த கல்தாமரை.....

ஹிந்துக் கோவில்கள்:



ஓர் அமெரிக்கரின் ஆராய்ச்சி.

ஸ்டீஃபன் நேப் (Stephan knapp) என்னும் அமெரிக்கர், “ கிரைம் எகன்ஸ்ட் இண்டியா & நீட் டு ப்ரொடெக்ட் ஏன்ஷியன்ட் வேதிக் ட்ரெடிஷன்ஸ்” (crime against India and need to protect ancient vedic traditions) என்னும் ஓர் ஆராய்ச்சிப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

அமெரிக்காவில் வெளிடப்பட்டுள்ள இப்புத்தகம், இப்போது “வசூல் மன்னனாகத்” திகழ்கிறது

 “இந்தியாவுக்கு எதிரானக் குற்றமும், வேதக் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியமும்” என்னும் இப்புத்தகத்தில்,

அவர் தென் இந்தியாவில் உள்ள, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஹிந்துக் கோவில்கள் எப்படி, மக்களாட்சியில், அரசாளும் அரசியல்வாதிகளால், மிகவும் நலிவடைந்து விட்டன என்பதைப் “புட்டு புட்டு” வைக்கிறார்.
    
இப்போது, மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியாவில், இஸ்லாமுக்கும், கிறித்தவத்துக்கும் உள்ள சலுகைகள், ஹிந்து மதத்துக்கு இல்லாமல் போனது எப்படி என்னும் துயரத்தை நன்றாக விளக்குகிறார்.

இதை நாம் சொன்னால் தானே, இங்குள்ளப் “பகுத்தறிவுவாதிகள்”, திட்டுவார்கள்!.

ஸ்டீஃபன் நேப்பை என்ன செய்து விட முடியும்? அவரது ஆராய்ச்சிக்கு, இவர்களால் ஈடு கொடுக்க முடியுமா?

சமீப கால வரவுகளான,கிறித்தவ தேவாலயங்களும், இஸ்லாமிய மசூதிகளும், அரசின் பிடியில் சிக்கித் தவிக்க வில்லை.

இவை சிறுபான்மை நிலையில் அந்தந்த மதத்தினரால் பராமரிக்கப் படுகின்றன.

ஆனால், புராதன இந்துக் கோவில்களோ, 1951-ம் ஆண்டில் கொண்டு வரப் பட்ட, “ஹிந்து மத மற்றும் தர்மஸ்தாபனங்கள் சட்டப்படி” (Hindu religious and charitable endownments Act)  அரசால் எடுத்துக் கொள்ளப் பட்டு விட்டன.

மதச் சாற்பற்ற அரசின் அதிகாரிகள், ஒவ்வொருக் கோவிலின் நிர்வாகத்திலும், ஆகம விஷயங்களிலும், அவற்றின் சொத்துக்களைக் கையாள்வதிலும், தங்கள் “மூக்கை நுழைக்க” ஆரம்பித்து விட்டனர்.

இந்த இடையூறு, மற்ற மத வழிபாட்டுத் தலங்களுக்குக் கிடையாது.

தெளிவாகச் சொல்வது ஸ்டீஃபன் நேப்.

அவர் , “ ஹிந்துக் கோவில்கள் எல்லாமே, பழங்காலத்தில் இருந்த அரசர்களால் கட்டப் பட்டதாகும்.

அவைகளுக்கு சொத்துக்களையும், ஆபரணங்களையும், அவர்கள் தான் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அவர்கள் பரம்பரையினர், தங்களுக்கு, இக்கோவில்களில் உரிமை ஏதும் இருப்பதாகக் கோர வில்லை.

இப்போது உள்ள ஜனநாயகத்தில், இத்தகையக் கோவில்கள் ஒன்று கூடக் கட்டப் படவில்லை.

அப்படி இருக்கும் போது, தங்களுக்குக் கொஞ்சமும் உரிமை இல்லாத் இவ்விஷயத்தில் , அரசு எப்படி நுழைந்து ,

எப்படி
ஹிந்து மத வழிபாட்டுத் தலங்களில் தலையிட முடியும்?” என்று கேட்கிறார்..

பகுத்தறிவுக் களஞ்சியங்கள் பதில் சொல்லலாமே!
     

ஆந்திராவில் உள்ள 43000 ஹிந்துக் கோவில்களின் ஆண்டு வருமானத்தில், 18 % தான், இக்கோவில்களுக்கு செலவழிக்கப் படுகிறது.  

மிச்சமுள்ள 82%, அரசின் மற்ற நிர்வாகச் செலவுகளுக்குத் தாரை வார்க்கப் படுகிறது.

திருப்பதி ஸ்ரீ வேங்கடாசலபதியின் ஆண்டு வருமானம் 3100 கோடி ரூபாய். இதில், 83% அரசு எடுத்துக் கொள்கிறது.

ஆந்திர அரசு, 10 புராதனக் கோவில்களை இடித்து, ஒரு “கால்ஃப்” மைதானம் கட்டுகிறது.

இதைப் போல, 10 மசூதிகளையோ, மாதாகோவில்களையோ இடிக்க எண்ணியிருந்தால் என்ன ஆகி இருக்கும்? கேட்கிறார், ஸ்டீஃபன் நேப். பதில் சொல்லுங்கள்.
     

கர்நாடகாவில், ஹிந்துக் கோவில்கள் மூலம் ஆண்டுக்கு வரும் 79 கோடி வருமானத்தில், 7 கோடியைத் தாராளமாக (!) , இக்கோவில்களின் பராமரிப்புகளுக்கு அரசு செலவிடுகிறது.

இதில் வயிற்றெரிச்சல் என்னவென்றால், 59 கோடி, ஹஜ் யாத்திரைக்குத்  திருப்பி விடப் படுகிறது என்பது தான்.

இதில், 13 கோடி ரூபாய், சர்ச்கள் பராமரிப்புக்காக அளிக்கும் அரசு, “ஊரான் வீட்டு நெய்யே: என் பெண்டாட்டி கையே” என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது.

நிதி இல்லாமல், இதுவரை 50000 ஹிந்துக் கோவில்கள் மூடிக் கிடக்கின்றன.இதுவும், ஸ்டீஃபன் நேப்பின் “கூர்நோக்கு” தான்.
     

கேரளாவில் உள்ள குருவாயூர்
ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் வருமானத்தில், கேரள அரசு கை வைக்காத நாளே இல்லை. அங்குள்ள ஆலய ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட நிதி இல்லாமல், அனைத்தையும் சுரண்டிக் கொண்டு போய் விடுகிறார்கள்.

இப்போது உள் நுழைவு டிக்கெட்டின் இமாலய விலை பற்றி எவரும்
எதிர்த்து பேசாதது கூட வருத்தமளிக்கிறது.

சபரிமலை, ஐயப்பன் கோவிலைச் சுற்றியிருக்கும் வனத் துறைக்கு சொந்தமான , ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் கொண்டக் காடுகளை, கிறித்தவர்களுக்குக் கொடுத்து, காட்டை அழித்து வருகிறார்கள்.

இப்போதுள்ள, “திருவாங்கூர்-கொச்சி சுயாட்சி தேவஸ்வம் போர்டைக்” ஓர் அவசரச் சட்டத்தின் மூலம்,  கலைத்து விடலாமா என்று கூட அரசு எண்ணி வருகிறது.

இதுவும் ஒரு அமெரிக்கப் பகுத்தறிவுவாதிக் கிறிஸ்தவரின் நோக்கு தான். நிச்சயமாக, ஸ்டீஃபன் நேப் ஒரு ஹிந்து அல்ல.
     

இது போல, ஒரிஸ்ஸாவில் உள்ள மிகப் புகழ் பெற்றத் தலமான, பூரி ஜகந்நாதருக்குச் சொந்தமான 70000 ஏக்கர் நிலத்தை அரசு “ஸ்வாஹா” செய்து விட்டது என்றும் மஹாராஷ்ட்ராவிலும் சுமார் 4 லட்சம் கோவில்கள் நலிவு அடைந்து விட்டதாகவும் வருத்தத்துடன் விவரிக்கிறார்.
    
 தமிழகத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். நானே ஹிந்து அற நிலைய சொத்துக்கள் எப்படியெல்லாம் அழிந்து வருகின்றன என்றும், கோவில்களுக்கு வர வேண்டிய வருமானம் வசூலிக்கப் படுவதே இல்லை என்றும், மண்டபபங்களோ, மதில்களோ, திருக் குளங்களோ, கொஞ்சம் கூடப் பராமரிக்கப் படுவதில்லை என்றும், ஆலய ஊழியர்களுக்கு சம்பளம் முறைப்படி வழங்கப்படுவதில்லை என்றும், அரசு அதிகாரிகள், கோவில் சொத்துக்களை தங்கள் இஷ்டம் போல விற்று, வேறு காரியங்களுக்குச் செலவைப்பது பற்றியும்,  புள்ளி விவரங்களுடன் ஸ்டீஃபன் நேப் விளக்குகறார்.
     

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் ஏற்பட்டுள்ள ஜனநாயக ஆட்சியில், ஹிந்து மத ஆலயங்களுக்கு நிகழ்ந்துள்ள இந்தக் கதிக்குக் காரணமாக, ஹிந்துக்களின் விழிப்புணர்வு இல்லாத நிலையும், அரசியல்வாதிகளின் கொள்ளைக்கார மனப் பான்மையும், ஊடக்ங்களின் ஹிந்து எதிர்ப்பு சதியும், முக்கியக் காரணங்களாகக் கூறுகிறார் இவ்வாசிரியர்.
     

ஹிந்துக்களே! இனியாவது விழிப்படையுங்கள். நம் ஆலயங்களில், அரசின் குறுக்கீடுகளைக் களைத்தெறியப் பாடுபடுங்கள்.

 “பகுத்தறிவு வாதிகள்” என்று அழைத்துக் கொள்ளும் அறிவற்றவர்  பேச்சைக் கொஞ்சம் கூடக் கேட்காதீர்கள்.

ஒவ்வோர் ஊரிலும் ஹிந்துக் கோவில்களுக்கு எதிராக நடக்கும் தவறுகளை அம்பலப் படுத்துங்கள். தட்டிக் கேளுங்கள்.
     
 ஒரு நியாயமான கிறிஸ்தவருக்கு , ஒரு மதப்பற்றுள்ள இஸ்லாமியருக்கு, உள்ள அறிவு கொஞ்சமாவது நமக்கு வேண்டாமா? நம் இளைஞர்களிடம் பேசுங்கள். அவர்களை ஒற்றுமைப் படுத்துங்கள். வெற்றி நமதே!