ஸார காண்டம்
முதல் ஸர்க்கம் - 1
எங்கும் முனிவர்களின் "சம்போ மஹாதேவா" என்று ஒலித்துக் கொண்டிருக்கும் கயிலாயம். உமாதேவி மிகுந்த நேசமுடன் சிவபெருமானோடு பேசிக் கொண்டிருந்தார்.
"சங்கரா! தாங்கள் எனக்குப் பல புராணங்களைக் கூறி வருகிறீர். இன்று எனக்கு நான் பக்தியுடன் வணங்கும் ஸ்ரீராமபிரானின் திவ்ய சரித்திரத்தை உம் வாயால் கேட்க ஆசைப்படுகிறேன். இராமரது சரித்திரம் எல்லோரகத்திலும் நேசத்தை உண்டு பண்ணும்; மகிழ்ச்சியைக் கூட்டும்; இராமபிரானின் வரலாற்றைத் திருவாய் மலருங்கள் ருத்திரரே!"
"எனக்குப் பிரியமானவளே! நல்லது கேட்டாய்! எல்லோருக்கும் நல்லதைத் தந்தருளும் இராமச்சந்திர மூர்த்தியின் கீர்த்தியையும் வரலாற்றையும் உனக்குக் கூறுகின்றேன், கேட்பாயாக."
மஹாதேவர் கூறத் தொடங்கினார். ..
பகவான் நாராயணனிடமிருந்து பிரம்மன் தோன்றினார்.
பிரம்மதேவரிடமிருந்து மரீசி தோன்றினார்.
மரிசியின் மகனாகக் கசியப முனிவர் பிறந்தார்.
கசியபருக்கு மகனாக சூரியன் பிறந்தார்.
சூரியதேவனுக்கு மகனாக வைவஸ்வத மனு பிறந்தார்.
வைவஸ்வத மனுவுக்கு மகனாக இக்ஷ்வாகு பிறந்தார்.
இக்ஷ்வாகுவுக்கு மகனாக விருக்ஷி பிறந்தார்.
விருக்ஷிக்கு மகனாக ககுஸ்தர் பிறந்தார்.
கருஸ்தருக்கு மகனாக இந்திரவாகர் பிறந்தார்.
இந்திரவாகருக்கு மகனாக விசுவரந்தியர் பிறந்தார்.
விசுவரந்தியருக்கு மகனாக சந்திரர் பிறந்தார்.
சந்திரருக்கு மகனாக யுவநாஸ்வர் பிறந்தார்.
யுவநாஸ்வருக்கு மகனாக சாபஸ்தர் பிறந்தார்.
சாபஸ்தருக்கு மகனாக பிரகதஸ்வர் பிறந்தார்.
பிரகதஸ்வருக்கு குவலயாஸ்வர் பிறந்தார்.
குவலயாஸ்வருக்கு திடாஸ்வர் பிறந்தார்.
திடாஸ்வருக்கு மகனாக அரியஸ்வர்.
அரியஸ்வருக்கு மகனாக நிகும்பர்.
நிகும்பரின் மகன் மருகநாஸ்வர்.
மருகநாஸ்வரின் மகன்.கிருதாஸ்வர்.
கிருதாஸ்வரின் மகன் சேனசித்.
சேனசித்தின் மகன் யுவநாஸ்வர்.
யுவநாஸ்வரின் மகனாக மாந்தாதா பிறந்தார்.
மாந்தாதாவின் மகன் புருகுத்ஸன்.
புருகுத்ஸனின் மகன் அநரண்ணியர்.
அநரண்ணியரின் மகன் அரியஸ்வர்.
அரியஸ்வரின் மகன் அருணர் .
அருணரின் மகன் திரிபந்தனர்.
திரிபந்தனரின் மகன் திரிசங்கு என்று அழைக்கப்பட்ட சத்தியவிரதர்.
சத்தியவிரதரின் மகன் ஹரிசந்திரன்.
ஹரிசந்திரனின் மகன் லோகிதர்.
லோகிதரின் மகன் ஹரிதர்.
ஹரிதரின் மகன் சம்பர்.
சம்பரின் மகன் சுதேவர்.
சுதேவரின் மகன் விஜயர்.
விஜயரின் மகன் பருகர் .
பருகரின் மகன் விருகர்.
விருகரின் மகன் பாகுகர்.
பாகுகரின் மகன் சகரர்.
சகரரின் மகன் அசமஞ்சர்.
அசமஞ்சரின் மகன் அம்சுமான்.
அம்சுமானின் மகன் திலீபன்.
திலீபனின் மகன் பகீரதன்.
பகீரதனின் மகன் சுரதன்.
சுரதனின் மகன் நாபர்.
நாபரின் மகன் சிந்துத்வீபர்.
சிந்துத்வீபரின் மகன் அயுதாயு.
அயுதாயுவின் மகன் ருதுபர்ணர்.
ருதுபர்ணரின் மகன் கல்மாஷபாதர்.
கல்மாஷபாதரின் மகன் சுதாசர்.
சுதாசரின் மகன் அஸ்மகர்.
அஸ்மகரின் மகன் மூலகர்.
மூலகரின் மகன் தசரதர்.
தசரதரின் மகன் ஜடபிடர் .
ஜடபிடரின் மகன் விஸ்வசகர்.
விஸ்வசகரின் மகன் கட்வாங்கர்.
கட்வாங்கரின் மகன் திலீபன்.
திலீபனின் மகன் ரகு.
ரகுவின் மகன் அஜன்.
அஜனின் மகன் தசரதன்.
தசரதனுக்கு ஸ்ரீமன் நாராயணரான இராமன் மகனாக அவதாரம் செய்தார். ….
No comments:
Post a Comment